ஆப்நகரம்

அரசுப்பேருந்துக்கு தீ வைப்பு; பணிமனைக்கு திரும்ப தூத்துக்குடி பேருந்துகளுக்கு அறிவுறுத்தல்!

அரசுப்பேருந்துக்கு தீவைக்கப்பட்டுள்ளதால், மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 25 May 2018, 8:20 pm
தூத்துக்குடி: அரசுப்பேருந்துக்கு தீவைக்கப்பட்டுள்ளதால், மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil Tuticorin Bus fire


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, நடைபெற்று வரும் போராட்டம் வன்முறைக் காட்சிகளாக மாறின. இதனை ஒடுக்கும் நடவடிக்கையில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில், மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளத்தில் அரசுப் பேருந்துக்கு தீவைக்கப்பட்டுள்ளது.

பேருந்தில் பயணித்த மக்களை இறக்கிவிட்டு, இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் பெட்ரோல் ஊற்றி தீவைத்துச் சென்றுள்ளனர்.

இதையடுத்து மாவட்ட எஸ்பி முரளி ரம்பா கருங்குளத்திற்கு விரைந்துள்ளார். இந்நிலையில் அரசுப் பேருந்துகளை பணிமணைக்கு திரும்ப மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Govt bus sets fire in Thoothukudi protests again.

அடுத்த செய்தி