ஆப்நகரம்

திறந்தவெளியில் பிரேதப் பரிசோதனை: மருத்துவர் பணியிட மாற்றம்

அரசு மருத்துவமனையில் திறந்தவெளியில் பிரேத பரிசோதனை செய்த புகாரில் மருத்துவர் உட்பட 3 ஊழியர்கள் பணியிட மாற்றம் பெற்றுள்ளனர்.

Samayam Tamil 19 Jan 2018, 12:30 pm
அரசு மருத்துவமனையில் திறந்தவெளியில் பிரேத பரிசோதனை செய்த புகாரில் மருத்துவர் உட்பட 3 ஊழியர்கள் பணியிட மாற்றம் பெற்றுள்ளனர்.
Samayam Tamil govt hospital doctor transferred after open post mortem
திறந்தவெளியில் பிரேதப் பரிசோதனை: மருத்துவர் பணியிட மாற்றம்


திருவள்ளூர் ரயில் நிலையத்தில் ஜார்க்கண்ட் மாநில வாலிபர் ஒருவர் 2 நாட்களுக்கு முன்பு இறந்து கிடந்தார். அவரது உடல் திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

அங்கு மருத்துவர்கள் இல்லை என்பதால் துப்புரவுப் பணியாளர்களே திறந்தவெளியில் வைத்து பிரேத பரிசோதனை செய்தனர். இத்தகவல் ஊடகங்கள் வெளியானதைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகத்திற்கு கண்டனம் குவிந்துள்ளது.

இந்நிலையில், திறந்தவெளியில் பிரேத பரிசோதனை செய்த புகார் தொடர்பாக திருவள்ளூர் அரசு மருத்துவமனை மருத்துவர் விஷ்வபிரியா அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

துப்புரவு பணியாளர் அப்பாவு திருத்தணிக்கும் மருந்தாளுநர் ருக்மாங்கதன் ஆவடி அரசு மருத்துவமனைக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் தயாளன் இன்று அளித்துள்ளார்.

அடுத்த செய்தி