ஆப்நகரம்

10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பேருந்து..! - அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பேருந்து ஏற்பாடு செய்யப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 13 May 2020, 8:14 pm
தமிழகத்தில் பொதுமுடக்கம் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஜூன் 1 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். கொரோனாவால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், நாள்தோறும் தொற்று அதிகரித்துக்கொண்டே வருகிறது. மேலும், மாணவர்கள் மன ரீதியாக தேர்வுக்கு தயராவதும் அவசியமாகும்.
Samayam Tamil 10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பேருந்து


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லை என்று முழுமையாக அறிவிக்கப்படும் போது பத்தாம் வகுப்பு தேர்வினை நடத்தலாம் என பல்வேறு அரசியல் கட்சிகள் அரசை வலியுறுத்தியுள்ளன. ஆனால், அதுகுறித்து தமிழக அரசு எந்த விளக்கத்தையும் கூறவில்லை.

இந்நிலையில், ஈரோட்டில் உள்ள கடம்பூர் மலைப்பகுதியில் வசித்து வரும் மலைவாழ் மக்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் இன்று நிவாரண பொருட்கள் வழங்கினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது; தேர்வு மையத்திற்கு வருகின்ற மாணவர்கள் எந்தப்பகுதியில் இருந்தாலும் அவர்களை அழைத்து வருவதற்கும், தேர்வு முடிந்த பிறகு மீண்டும் அந்தந்த பகுதிகளில் சென்று விடுவதற்கும் பேருந்து வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் 'காலேஜ் டைமிங்' விரைவில் மாற்றம்!!

அதேபோல தேர்வுக்கு வரும் மாணவர்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் தேர்வு அறைகளில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் மாணவர்கள் அனைவரும்
முகக்கவசம் அணிந்து கொண்டு தேர்வுக்கு வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி