ஆப்நகரம்

கோவில்கள் திறப்பு: பாஜகவுக்கு கிடைத்த வெற்றி - அண்ணாமலை, எச்.ராஜா

தமிழகத்தில் அனைத்து நாட்களிலும் கோவில்கள் திறக்கப்படும் என்ற அறிவிப்புக்கு பாஜகவினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

Samayam Tamil 14 Oct 2021, 6:45 pm
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வரும் சூழலில் அடுத்தகட்டமாக கூடுதல் தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில், வழிபாட்டு தலங்கள் அனைத்தும் அனைத்து நாள்களிலும் திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் இரவு 11 மணி வரை திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்


தனிப்பயிற்சி நிலையங்கள், அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் இன்று முதல் செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது. அதேபோல, நவம்பர் 1 முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வாரத்தில் அனைத்து நாட்களிலும் கோவில்கள் திறக்கப்படும் என்ற அரசின் அறிவிப்புக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.

அதுகுறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் '' நவராத்திரி திருநாளில், தமிழக பாஜகவின் வேண்டுகோளுக்கிணங்க எல்லா நாட்களிலும் திருக்கோயில்களை திறக்க உத்தரவிட்ட முதல்வர் முக ஸ்டாலினுக்கும், அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபுவுக்கும் நன்றி'' என தெரிவித்துள்ளார்.


சென்னை கமிஷனர் ஷங்கர் ஜிவாலுக்கு நெஞ்சுவலி: அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி

அவரை தொடர்ந்து பாஜக மூத்த தலைவரான எச். ராஜா '' எல்லா நாட்களிலும் கோவில்கள் பக்தர்களின் வழிபாட்டிற்கு திறந்து வைத்திருக்க வேண்டும் என்று பாஜக போராட்டம் மற்றும் மாநிலத்தலைவரின் உறுதியான நிலைபாட்டிற்கு கிடைத்த வெற்றி.

பாஜகவின் கோரிக்கையை ஏற்று கோயிலை திறக்க உத்தரவிட்டிருக்கின்ற மாண்புமிகு தமிழக முதல்வருக்கு நன்றி'' என இவ்வாறு அவர் கூறியுள்ளார். முன்னதாக தமிழகத்தில் மதமாற்றத்திற்காக வேண்டுமென்றே திமுக அரசு கோவில்களை மூடியுள்ளதாகவும், இந்துக்களுக்கு எதிராக செயல்படுவதாகவும் கோவில்களின் முன்பு பாஜக கட்சி போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி