ஆப்நகரம்

மருத்துவர்கள் போராட்டம் ஒத்திவைப்பு!

மத்திய அரசு மருத்தவர்களுக்கு இணையான சம்பளம் வழங்கக்கோரி 21ம் தேதி அறிமருத்துவர்கள் அறிவித்த போராட்டம்.

Samayam Tamil 18 Sep 2018, 10:55 pm
மத்திய அரசு மருத்தவர்களுக்கு இணையான சம்பளம் வழங்கக்கோரி 21ம்தேதி அறிமருத்துவர்கள் அறிவித்த போராட்டம்.
Samayam Tamil doctor protest


அரசு மருத்துவர்கள் விதிகளின்படி, அனுபவத்தின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளைவலியுறுத்தி வரும் 21ஆம் தேதி மாநிலம் தழுவிய அடையாள வேலைநிறுத்தப் போரட்டத்தில்ஈடுபட உள்ளதாக அறிவித்திருந்தனர்.ஆனால்இந்தப் போராட்டத்துக்கு தமிழக அரசு தடைவிதித்துள்ளது.தடையை மீறி போரட்டம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனையடுத்து, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அனைத்துஅரசுமருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் செந்தில், திட்டமிட்டபடி தங்களது அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார்.இதில் அவசர சேவைகள் மட்டும் அளிக்கப்படும் என்றும் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள்இஎஸ்ஐ மருத்துவர்கள் உள்பட 20,000 பேர்வேலைநிறுத்தத்தில்கலந்து கொள்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார். இந்நிலையில், அரசு தரப்பில் கால அவகாசம் கோரியதையடுத்து, செப்டம்பர் 21ம் தேதி நடைபெறுவதாக இருந்த மருத்துவர்கள் போராட்டம், 4 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி