ஆப்நகரம்

மக்கள் அனுமதியுடன் மணல் குவாரி: கொறடா ராஜேந்திரன்

அரியலூர் கொல்லிடம் ஆற்றில் மக்கள் சம்மதத்துடனே மணல் குவாரி அமைக்கப்படும் என்று அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் கூறியுள்ளார்.

Samayam Tamil 22 Apr 2018, 2:41 am
அரியலூர் கொல்லிடம் ஆற்றில் மக்கள் சம்மதத்துடனே மணல் குவாரி அமைக்கப்படும் என்று அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் கூறியுள்ளார்.
Samayam Tamil korada rajendran


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி, அதிமுக சார்பில் வரும் 25ம் தேதி, அரியலூர் மாவட்டத்தில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகளை அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர், நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் பேசிய அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக அதிமுக மட்டுமே உண்மையாக போராடுவதாக கூறினார். மேலும், மணல் குவாரிகளை அரசே ஏற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், மக்கள் சம்மதத்துடனே கொல்லிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அடுத்த செய்தி