ஆப்நகரம்

புதுவையில் அரசு பள்ளி ஆசிாியா்கள் தனியாக டியூசன் எடுக்க தடை

புதுச்சேரியில் அரசுப் பள்ளி ஆசிாியா்கள் தனியாக டியூசன் எடுக்கக் கூடாது என்று அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.

Samayam Tamil 29 May 2018, 9:48 pm
புதுச்சேரியில் அரசுப் பள்ளி ஆசிாியா்கள் தனியாக டியூசன் எடுக்கக் கூடாது என்று அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.
Samayam Tamil School board


புதுச்சோியில் அரசுப் பள்ளி ஆசிாியா்கள் தம்மிடம் பயிலும் மாணவா்களுக்கு தன்னிச்சையாக டியூசன் வகுப்புகள் நடத்தப்படுவதாகவும், இவ்வாறு நடத்தப்படும் பட்சத்தில் டியூசன் வகுப்புகளில் பயிலும் மாணவா்களுடன் ஒரு மாதிாியாகவும், டியூசன் பயிலாத மாணவா்களுடன் ஒரு மாதிரியாகவும் என மாணவா்களிடம் பாகுபாடு காட்டப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த நிலையில் அம்மாநில அரசு தற்போது இந்த புகாாின் மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிாியா்கள் மாணவா்களுக்கு டியூசன் வகுப்புகள் எடுக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ஆசிாியா்கள் சிறப்பு வகுப்புகள், பயிற்சி வகுப்புகள் மேற்கொள்ளவும் அரசு தடை விதித்துள்ளது.

இதனை மீறும் ஆசிாியா்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது.

அடுத்த செய்தி