ஆப்நகரம்

தமிழகத்தில் ஹைட்ரோ ஹார்பன் எடுக்கும் திட்டம்: இன்று ஒப்பந்தம் கையெழுத்து!

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஒப்பந்தம், இன்று கையெழுத்தாக உள்ளதாக தகவல்.

Samayam Tamil 1 Oct 2018, 12:00 pm
தமிழகத்தின் மூன்று இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஒப்பந்தம், டெல்லியில் இன்று கையெழுத்தாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Samayam Tamil hud


இந்தியாவில் எண்ணெய் வளங்களைக் கண்டறிந்து உற்பத்தி செய்வதற்காக ஹைட்ரோ கார்பன் வளங்களைக் கண்டறிதல் மற்றும் உரிமம் வழங்கும் கொள்கையை மத்திய அரசு கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. அதன்படி நாடு முழுவதும் 55 புதிய வட்டங்களில் ஹைட்ரோகார்பன் வளங்களை எடுக்க முடிவு செய்து, அதற்கான நிறுவனங்களையும் மத்திய அரசு தேர்வு செய்துள்ளது.

புதிதாக ஹைட்ரோகார்பன் எடுக்கப்படவுள்ள 55 மண்டலங்களில் 3 தமிழகத்தில் அமைந்துள்ளன. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதல் கடலூர் வரை முதல் மண்டலம், பரங்கிப்பேட்டை முதல் வேளாங்கண்ணி வரை இரண்டாவது மண்டலம், குள்ளஞ்சாவடி முதல் தரங்கம்பாடி வரை மூன்றாவது மண்டலமும் அமைக்கப்படவுள்ளன.

இவற்றில் முதல் மண்டலத்தில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான உரிமம் ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கும், மற்ற இரு மண்டலங்களுக்கான உரிமங்கள் வேதாந்தா நிறுவனத்திற்கும் வழங்கப்பட உள்ளன. இவற்றில் முதல் மண்டலத்தில் 4 இடங்கள், மற்ற இரு மண்டலங்களில் தலா 10 இடங்கள் என மொத்தம் 24 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதற்கான ஒப்பந்தம் பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிராதன் முன்னிலையில் டெல்லியில் இன்று கையெழுத்தாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்த செய்தி