ஆப்நகரம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 5,80,188 பேர் விண்ணப்பம்!

தமிழகத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு முகாமில், 5 லட்சத்து 80 ஆயிரத்து 188 பேர் புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர்.

Samayam Tamil 25 Feb 2019, 4:27 pm
தமிழகத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு முகாமில், 5 லட்சத்து 80 ஆயிரத்து 188 பேர் புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர்.
Samayam Tamil வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க 5,80,188 பேர் விண்ணப்பம்!
வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க 5,80,188 பேர் விண்ணப்பம்!


இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் அவர்களின் அறிவுரைப்படி வாக்காளர் பட்டியலின் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணி மேற்கொள்ளப்பட்டு கடந்த 31 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதையடுத்து வாக்காளர் இறுதிப் பட்டியலில் இடம்பெறாதவர்களை சேர்ப்பதற்காக சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் தமிழகம் முழுவதும் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில், பெயர் சேர்க்கை, திருத்தம், நீக்கம் ஆகியவற்றுக்காக 7 லட்சத்து 31 ஆயிரத்து 333 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு தேர்தலுக்கு முன் பட்டியலில் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது..

இதனிடையே வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவுகளை கணக்கிட மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தமிழக தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாஹூ உத்தரவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி