ஆப்நகரம்

கால்வாயில் அடித்து செல்லப்பட்ட தாயை காப்பாற்ற முயன்ற மகள் பலி!

திருப்பூரில் கால்வாயில் அடித்து செல்லப்பட்ட தாயை காப்பாற்ற முயன்று நீரில் குதித்த மகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 21 Apr 2019, 12:02 pm
திருப்பூரில் கால்வாயில் அடித்து செல்லப்பட்ட தாயை காப்பாற்ற முயன்று நீரில் குதித்த மகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil கால்வாயில் அடித்து செல்லப்பட்ட தாயை காப்பாற்ற முயன்ற மகள் பலி!
கால்வாயில் அடித்து செல்லப்பட்ட தாயை காப்பாற்ற முயன்ற மகள் பலி!


திருப்பூர் மாவட்டம் பெரிச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கலா. கலா அவரது மகள் சந்தியா மற்றும் உறவினர்கள் மரகதம், வள்ளி, சங்கீதா என 5 பேரும் கொடுவாயில் உள்ள தங்கள் உறவினர் வீட்டிற்கு டூவிலர் மூலம் சென்றுள்ளனர். பின்னர் திரும்பி வரும் வழியில் ஆண்டிபாளையம் பி.ஏ.பி வாய்க்காலில் நீர் சென்று கொண்டிருந்ததை பார்த்த அனைவரும் தங்கள் வாகனங்களை நிறுத்தி விட்டு குளிக்க சென்றனர்.

முதலில் கால்வாயில் இறங்கிய கலா, நீரில் அடித்து செல்லப்படுவதை கண்ட அவரது மகள் சந்தியா (17) தாயை காப்பாற்ற தண்ணீரில் குதித்துள்ளார். அவரும் அடித்து செல்லப்பட்டதால் அவர்கள் இருவரையும் காப்பாற்ற மரகதம், வள்ளி, சங்கீதா என மூவரும் ஒன்றன்பின் ஒன்றாக நீரில் குதித்துள்ளனர். இதில் நான்கு பேரும் கரை ஓரங்களை பிடித்த நிலையில் சங்கீதா நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார்.

அருகில் இருந்த பொதுமக்கள் தத்தளித்த நால்வரையும் உயிரிழந்த சந்தியாவின் உடலையும் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவிநாசி பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தாயை காப்பாற்ற முயன்ற மகள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி