ஆப்நகரம்

நெல்லையில் இருந்து கேரளாவுக்கு கடத்தப்படும் கல் செக்கு!

நெல்லையிலிருந்து கேரளாவுக்கு கல்செக்கு கடத்த நடைபெற்ற முயற்சியை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

TNN 21 Oct 2017, 5:25 pm
நெல்லையிலிருந்து கேரளாவுக்கு கல்செக்கு கடத்த நடைபெற்ற முயற்சியை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
Samayam Tamil grinding stones seized near kerala
நெல்லையில் இருந்து கேரளாவுக்கு கடத்தப்படும் கல் செக்கு!


நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள வாகைக்குளம் பகுதியில், நள்ளிரவில் ஒரு லாரியில் 7 கல் செக்குகள் ஏற்றிச்செல்லப்பட்டன. அந்த லாரியை சிறைப்பிடித்து காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் கல் செக்குகள் அனுமதியும் இல்லாமல் கேரளாவுக்கு கடத்தப்படுவது தெரியவந்தது. இதனையடுத்து லாரி ஓட்டுநர் சக்திவேலு மற்றும் லாரி உரிமையாளர் குட்டப்பன் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த கடத்தல் முயற்சி தடுக்கப்பட்டதால் மொத்தம் ஏழு கல் செக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. கல் செக்கு கடத்தும் கும்பலுக்கும் சிலை கடத்தலுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாரும் இந்த விசாரணையில் இணைந்துள்ளனர்.

அடுத்த செய்தி