ஆப்நகரம்

ஸ்டெர்லைட் ஆலை பகுதியில் நிலத்தடி நீர் மோசம்: மத்திய அரசு தகவல்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை அமைந்துள்ள சிப்காட் வளாகப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் மோசமாக இருப்பதாக மத்திய அரசு தகவல் அளித்துள்ளது.

Samayam Tamil 24 Jul 2018, 3:21 pm
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை அமைந்துள்ள சிப்காட் வளாகப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் மோசமாக இருப்பதாக மத்திய அரசு தகவல் அளித்துள்ளது.
Samayam Tamil sterlite-main-750_0_0


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடந்த போராட்டத்தின்போது, 13 பேர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அந்த ஆலை மூடி சீல் வைக்கப்பட்டது.

இதனையடுத்து அங்கிருக்கும் காப்பர் கழிவுகளை அகற்றும் பணி பல நாட்களாக நடைபெற்றது. இந்நிலையில் இந்த ஆலை அமைந்துள்ள பகுதியில் மத்திய அரசின் நிலத்தடி நீர் வாரியம் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது.

இதன்படி, ஸ்டெர்லைட் ஆலை அமைந்துள்ள சிப்காட் வளாகத்தில் நிலத்தடி நீர் மிகவும் மாசடைந்து மோசமான நிலையில் உள்ளது என்று மத்திய அரசு தரப்பில் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமையன்று மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நீர்வளத்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இதனைத் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி