ஆப்நகரம்

வரி ஏய்ப்பு: சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி கடையில் அதிகாரிகள் சோதனை

வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சென்னையில் செயல்பட்டு வரும் பிரபல சரவணா ஸ்டோர்ஸில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Samayam Tamil 19 Jul 2019, 12:15 pm
சென்னையில் செயல்பட்டு வரும் பிரபல சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில் வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Samayam Tamil Saravana Store


சென்னையை தலைமை இடமாகக் கொண்டு சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்கு தி.நகர், பாடி உள்பட 5 இடங்களில் கிளைகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் கடைகளில் வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்தது.

இதனைத் தொடர்ந்து பாடி, தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டுவரும் சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஜனவரி மாதம் இதே நிறுவனத்திற்குச் சொந்தமான சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் கிளைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்த நிலையில், தற்போது வரி ஏய்ப்புப் புகாரில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி