ஆப்நகரம்

கூடுவாஞ்சேரியில் மீண்டும் திரும்பும் 2015 பயங்கரம்: பீதியில் மக்கள்!!

கூடுவாஞ்சேரியில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி வருவதால் , வெள்ள நீர் வீடுகளில் புகுந்துள்ளதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

TNN 31 Oct 2017, 3:53 pm
கூடுவாஞ்சேரியில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி வருவதால் , வெள்ள நீர் வீடுகளில் புகுந்துள்ளதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil guduvanchery water comes to the houses as all the water body fills up
கூடுவாஞ்சேரியில் மீண்டும் திரும்பும் 2015 பயங்கரம்: பீதியில் மக்கள்!!


கூடுவாஞ்சேரியில் உள்ள தாங்கல் ஏரியிலிருந்து தண்ணீர் வேகமாக வெளியேறி வருகிறது. வடகிழக்கு பருவமழை நேற்று முதல் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் கனமழையால் ஏரி, குளம் போன்ற நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

கூடுவாஞ்சேரியில் உள்ள தாங்கல் ஏரியிலிருந்து மழைநீர் வெளியேறி வருகிறது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இங்கு பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதேபோல் நந்திவரம் ஏரியிலிருந்தும் தண்ணீர் வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு கூடுவாஞ்சேரி ஏரி உடைந்ததால் ஊரப்பாக்கம், தாம்பரம் , முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

guduvanchery water comes to the houses as all the water body fills up

அடுத்த செய்தி