ஆப்நகரம்

குட்கா முறைகேடு வழக்கு: சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரணை நடத்தி வந்த குட்கா ஊழல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.

Samayam Tamil 26 Apr 2018, 12:11 pm
லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரணை நடத்தி வந்த குட்கா ஊழல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.
Samayam Tamil குட்கா முறைகேடு வழக்கு: சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
குட்கா முறைகேடு வழக்கு: சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!


தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், அவற்றை விற்பனை செய்வதற்காக டிஜிபி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள், தமிழக அமைச்சர்கள், உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள், மத்திய கலால் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் லஞ்சம் வாங்கியுள்ளதாக புகார் எழுந்தது.

இந்த புகார் தொடர்பாக பல்வேறு ஆவணங்களும் கைப்பற்றுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, திமுக கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ ஜெ.அன்பழகன், குட்கா ஊழல் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டுமென உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், குட்கா வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.

தடையை மீறி நடைபெறும் குட்கா உற்பத்தி, விற்பனை, சந்தையில் கிடைப்பது என அனைத்தையும் விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பில் சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, தமிழக அரசு குட்கா வழக்கை சிபிஐக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி