ஆப்நகரம்

குட்கா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கு 4 நாள் சி.பி.ஐ. காவல்

குட்கா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாதவராவ் உள்ளிட்ட 5 பேரை 4 நாள் சி.பி.ஐ. காவலில் விசாரிக்க சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Samayam Tamil 10 Sep 2018, 5:36 pm
குட்கா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாதவராவ் உள்ளிட்ட 5 பேரை 4 நாள் சி.பி.ஐ. காவலில் விசாரிக்க சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
Samayam Tamil Gutkha


குட்கா ஊழல் விவகாரத்தில் வருமான வரித்துறையினா் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் சுமாா் 35 இடங்களில் சோதனை நடத்தினா். இந்த சோதனையில் குட்கா கிடங்கின் உரிமையாளா் மாதவராவ், சீனிவாசராவ், உமா சங்கா் உள்ளிட்ட 5 போ் கைது செய்யப்பட்டனா்.

மாதவராவ் உள்ளிட்ட 5 பேரையும் 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. அதிகாாிகள் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனா். மனு விசாரணையின் போது சி.பி.ஐ. தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தில், குட்கா ஊழலில் ஈடுபட்டவா்கள் பல்வேறு துறை அதிகாாிகளுக்கு லஞ்சம் கொடுத்துள்ளனா்.

உணவுப் பாதுகாப்பு அதிகாாிக்கு ரூ.2.5 லட்சமும், கலால் வரித்துறை அதிகாாிக்கு ரூ.23 ஆயிரமும் லஞ்சப்பணம் கொடுக்கப்பட்டுள்ளது. லஞ்சம் பெற்றதால் குட்கா உற்பத்தியை தடுக்க அதிகாாிகள் தவறிவிட்டனா். 2013ம் ஆண்டு முதல் இந்த ஊழலால் அரசுக்கு ரூ.300 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. வருமான வரித்துறை சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட வேண்டும். காவலில் எடுத்து விசாரிப்பதால் மட்டுமே உண்மை வெளிவரும் என்று தொிவித்தனா்.

இதனைத் தொடா்ந்து 5 பேரையும் 4 நாள் காவலில் விசாரிக்க சி.பி.ஐ. அதிகாாிகளுக்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும் இவா்களிடம் வருகிற 14ம் தேதி காலை 11 மணி வரை விசாரணை நடத்திக் கொள்ளலாம் என்றும், விசாரணை முடிந்து வருகிற வெள்ளிக்கிழமை அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி