ஆப்நகரம்

குட்கா ஊழல் வழக்கு - இரண்டாவது நாளாக தொடரும் சிபிஐ சோதனை!!

குட்கா ஊழல் வழக்குத் தொடர்பாக, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நடத்தி வரும் சோதனை, இரண்டாவது நாளாக இன்றும் நீடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Samayam Tamil 6 Sep 2018, 9:47 am
குட்கா ஊழல் வழக்குத் தொடர்பாக, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நடத்தி வரும் சோதனை, இரண்டாவது நாளாக இன்றும் நீடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
Samayam Tamil குட்கா ஊழல் வழக்கு: இரண்டாவது நாளாக தொடரும் சிபிஐ சோதனை!!
குட்கா ஊழல் வழக்கு: இரண்டாவது நாளாக தொடரும் சிபிஐ சோதனை!!


தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், அவற்றை விற்பனை செய்வதற்காக டிஜிபி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள், தமிழக அமைச்சர்கள், உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள், மத்திய கலால் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் லஞ்சம் வாங்கியுள்ளதாக புகார் எழுந்தது.

இந்த புகார் தொடர்பாக பல்வேறு ஆவணங்களும் கைப்பற்றுள்ளதாக செய்திகள் வெளியானதையடுத்து, இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, திமுக கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ ஜெ.அன்பழகன், குட்கா ஊழல் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டுமென உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், குட்கா வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது.

இந்நிலையில், நேற்று காலை சிபிஐ அதிகாரிகள் குட்கா வழக்கில் தொடர்புடைய அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ரமணா, தமிழக டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் டிஜிபி ஜார்ஜ் உள்ளிட்ட பலருக்குச் சொந்தமான, தமிழகம் முழுவதும் உள்ள 40 இடங்களில், நேற்று திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த சோதனை இரண்டாவது நாளாக இன்றும் நீடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிலும், முன்னாள் டிஜிபி ஜார்ஜ் வீட்டில் விடிய விடிய சோதனை நடத்தப்பட்டதாகவும், அதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்த செய்தி