ஆப்நகரம்

Gutkha Scam: குட்கா நிறுவன உரிமையாளர் மாதவ ராவ்வுடன் சேர்த்து 4 பேர் கைது!!

குட்கா நிறுவன உரிமையாளர் மாதவ ராவ் உள்ளிட்ட 4 பேரை, சிபிஐ அதிகாரிகள் குட்கா ஊழல் வழக்கின் கீழ் கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 6 Sep 2018, 1:31 pm
குட்கா நிறுவன உரிமையாளர் மாதவ ராவ் உள்ளிட்ட 4 பேரை, சிபிஐ அதிகாரிகள் குட்கா ஊழல் வழக்கின் கீழ் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil குட்கா நிறுவன உரிமையாளர் மாதவ ராவ்வுடன் சேர்த்து 4 பேர் கைது!!
குட்கா நிறுவன உரிமையாளர் மாதவ ராவ்வுடன் சேர்த்து 4 பேர் கைது!!


தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், அவற்றை விற்பனை செய்வதற்காக டிஜிபி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள், தமிழக அமைச்சர்கள், உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள், மத்திய கலால் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் லஞ்சம் வாங்கியுள்ளதாக புகார் எழுந்தது.

இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரணையில், குட்கா நிறுவன உரிமையாளர் மாதவ ராவ்விடமிருந்து பல்வேறு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து, திமுக கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ ஜெ.அன்பழகன், குட்கா ஊழல் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டுமென உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், குட்கா வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது.

இந்நிலையில், நேற்று காலை சிபிஐ அதிகாரிகள் குட்கா வழக்கில் தொடர்புடைய அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ரமணா, தமிழக டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் டிஜிபி ஜார்ஜ் உள்ளிட்ட பலருக்குச் சொந்தமான, தமிழகம் முழுவதும் உள்ள 35 இடங்களில், நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர். விடிய விடிய நடைபெற்ற இந்த சோதனையில், பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே, குட்கா நிறுவன உரிமையாளர் மாதவ ராவ், அதன் மற்றொரு உரிமையாளர் உமா சங்கர், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி செந்தில் முருகன், கலால்துறை அதிகாரி பாண்டியன் ஆகிய நான்கு பேரை சிபிஐ அதிகாரிகள் இன்று அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும், இரண்டு தரகர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி