ஆப்நகரம்

பேரரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலையில் சிக்கல்? மத்திய அரசு முடிவால் புதிய திருப்பம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பேரரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய மத்திய அரசிடம் கவர்னர் ஆலோசனை கேட்க வேண்டும் என்று மத்திய உள்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Samayam Tamil 12 Sep 2018, 6:30 am
முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பேரரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய மத்திய அரசிடம் கவர்னர் ஆலோசனை கேட்க வேண்டும் என்று மத்திய உள்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil rajiv gandhi


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 போ் கடந்த 26 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனா். இவா்களுக்கு வழங்கப்பட்டிருந்த தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட நிலையில் இவா்களை விடுவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தமிழக ஆளுநா் இந்த வழக்கில் முடிவு எடுக்க அதிகாரம் உள்ளதாக தொிவித்தது. அதன்படி கடந்த ஞாயிற்றுக் கிழமை தமிழக அமைச்சரவை கூட்டப்பட்டு 7 பேரை விடுவிக்க வேண்டும் என்று கொள்கை முடிவு எடுக்கப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், பேரரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய மத்திய அரசிடம் கவர்னர் ஆலோசனை கேட்க வேண்டும் என்று மத்திய உள்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது: ‘முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கை சிபிஐ தலைமையிலான பல்நோக்கு ஒழுங்கு கண்காணிப்பு அமைப்பு தான் விசாரித்தது. எனவே, குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்வதையோ, அல்லது அவர்களின் தண்டனைகளை குறைப்பது குறித்து மத்திய அரசிடம் தமிழக கவர்னர் ஆலோசனை செய்ய வேண்டும்.’ இவ்வாறு தெரிவித்தனர்.

அடுத்த செய்தி