ஆப்நகரம்

''54 ஐ விட 105 ''தான் பெருசுனு இப்போ தெரியுதா.? எச்.ராஜா அட்வைஸ்...

மகாராஷ்டிராவில் ஏற்பட்ட அரசியல் திருப்பத்தை குறித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பதிலளித்துள்ளார்.

Samayam Tamil 23 Nov 2019, 6:42 pm
மகாராஷ்டிராவில் நடந்த முடிந்த தேர்தலில் பாஜக 105 இடங்களையும், அதோடு கூட்டணி அமைத்த சிவசேனா 56 இடங்களையும் கைப்பற்றியது. அதேபோல தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களையும், அதோடு கூட்டணி அமைத்த காங்கிரஸ் கட்சி 44 இடங்களையும் கைப்பற்றியது.
Samayam Tamil 54 ஐ விட 105 தான் பெருசுனு இப்போ தெரியுதா.? எச்.ராஜா அட்வைஸ்...


மாநிலத்தில் 288 தொகுதிகளில் 161 தொகுதிகளை கைப்பற்றி வெற்றி கண்ட பாஜக கூட்டணி தனது ஆட்சியை அமைக்க முன்வந்தது. ஆனால் அதற்கு சிவசேனா உடன்படவில்லை. இதனால் மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

கீழடியில் 6ஆம் கட்ட அகழாய்வு தொடக்கம் எப்போது? - அமைச்சர் பதில்

இதையடுத்தது சிவசேனா பாஜகவின் கூட்டணியை முறித்து கொண்டு தேசியவாத காங்கிரஸ், காங்கிரசுடன் கூட்டணி அமைத்தது. இந்த கூட்டணி நடத்திய ஆலோசனைக்கு பின்னர் சிவசேனாவின் உத்தர் தாக்கரே முதல்வர் பதவிக்கு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த அறிவிப்பை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் வெளியிட்டார்.

மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சியே அமையுமென உறுதியான நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் பாஜகவுடன் சேர்ந்து ஆட்சி அமைத்துள்ளார். இந்த திருப்பம் சிவசேனா கட்சிக்கு பேரிடியை கொடுத்துள்ளது.

மரணத்தின் பாதையாக மாறிய டிக் டாக்... தமிழகத்தில் தொடரும் சோகங்கள்...

இதையடுத்து பல அரசியல் தலைவர்கள் பாஜகவை விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் மகாராஷ்டிரா அரசியல் திருப்பத்தை குறித்து பாஜக தேசிய செயலாளர் பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது 105 ஐ விட 54 தான் உயர்ந்தது என நினைத்தவர்களுக்கு சரியான கணித பாடத்தை கற்றுக்கொண்டனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைக்க சிவசேனாவுக்கும், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் பயன்படுத்திக்கவில்லை. இதனால் அங்கு குடியரசு ஆட்சி முறை கொண்டு வரப்பட்டது. அதன் பிறகு பாஜக ஆட்சி அமைத்துள்ளது என கூறினார்.

அடுத்த செய்தி