ஆப்நகரம்

எச்.ராஜா: தலித் சகோதரர்கள் என்னைப் போராடச் சொல்றாங்க... ரோடு சைடு பாரதியை அரெஸ்ட் பண்ணுங்க...

​ஆர்.எஸ்.பாரதியின் தரக்குறைவான பேச்சைச் சுட்டிக்காட்டத் தன்பாணியில் தானும் தரக்குறைவாக ட்வீட் செய்துள்ளார் எச்.ராஜா.

Samayam Tamil 19 Feb 2020, 9:35 pm
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் தரக்குறைவான பேச்சுக்கு பல தரப்பிலிருந்தும் கண்டனங்களும் எதிர்ப்புக்குரல்களும் எழுந்து வந்த நிலையில், ஆர்.எஸ்.பாரதி இதற்கு விளக்கமளித்தார்.
Samayam Tamil RS Bharathi and H Raja


இந்த விளக்கமும், இதனோடு சேர்த்து கடமைக்கு கேட்கப்பட்ட வருத்தமும் பெரிதாக பலனளிக்கவில்லை. தலித் மக்கள் குறித்து இப்படிப்பேசியும் திருமாவளவன் அமைதி காப்பது ஏன்? என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதுகுறித்து, வைகோவிடம் கேட்கப்பட்டபோதும் அவர் பேசாமல் மறுத்ததையும் குறிப்பிட்டு நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


இந்நிலையில், தரக்குறைவான பேச்சின் மூலம் தமிழகத்தின் பல பகுதிகளிலும் அறியப்படும் அரசியல்வாதிகளில் ஒருவரான எச்.ராஜா, தலித் சமுதாயத்தை ஆர்.எஸ்.பாரதி பேசியது கண்டிக்கத்தக்கது என்று அதே பாணியில் ட்வீட் செய்துள்ளார்.


அவர், பதிவிட்ட ட்வீட்டில் தெரிவிக்கப்பட்டதாவது,

“மீடியா அப்படி தொழில் பண்ணக்கூடாது ஒகேவா?, கருணாநிதி போட்ட பிச்சைங்க...” பிரபல திமுக எழுத்தாளர்!

நான் என்னைப்பற்றி பேசினால் எதிர்வினை ஆற்றுவதில்லை. ஆனால் R(oad) S(ide) பாரதி தலித் சமுதாயத்தை கொச்சை படுத்தியது கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல அவர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.தொடர் தர்ணா போராட்டம் நடத்த தலித் சகோதரர்கள் வற்புறுத்துகின்றனர்.” என்று தெரிவித்துள்ளார்.

ஆர்.எஸ்.பாரதியின் தரக்குறைவான பேச்சைச் சுட்டிக்காட்டத் தன்பாணியில் தானும் தரக்குறைவாக ட்வீட் செய்துள்ளார் எச்.ராஜா.

அடுத்த செய்தி