ஆப்நகரம்

தமிழகம் பற்றி அமித்ஷா கூறியதை எச்.ராஜா தவறாக மொழிபெயர்த்துள்ளார்: ஜெயக்குமார்

தமிழகம் பற்றி பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கூறியதை எச்.ராஜா தவறாக மொழிப் பெயர்த்திருப்பார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 10 Jul 2018, 1:13 pm
தமிழகம் பற்றி பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கூறியதை எச்.ராஜா தவறாக மொழிப் பெயர்த்திருப்பார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil தமிழகம் பற்றி அமித்ஷா கூறியதை எச்.ராஜா தவறாக மொழிபெயர்த்துள்ளார்: ஜெயக்குமார்
தமிழகம் பற்றி அமித்ஷா கூறியதை எச்.ராஜா தவறாக மொழிபெயர்த்துள்ளார்: ஜெயக்குமார்


தமிழகத்தில் பாஜக கட்சியை வலுப்படுத்துவதற்காக, அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா தலைமையில் நேற்று பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அமித் ஷா, தமிழகத்தில் ஊழல் நிறைந்துவிட்டதாக கூறினார்.

இந்தக் கூட்டத்தில் நுண்ணுயிர் பாசனம் (மைக்ரோ இர்ரிகே‌ஷன்) என்று அமித்ஷா கூறியதை, பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா சிறுநீர் பாசனம் என தவறாக மொழிபெயர்த்தது பலரின் விமர்சனத்திற்கு உள்ளானது.

இந்நிலையில், தமிழகத்தில் ஊழல் நிறைந்திருப்பதாக அமித் ஷா கூறியிருப்பது குறித்து பதிலளித்த தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், “பாஜக கட்சியை தமிழகத்தில் வலுப்படுத்த அமித்ஷா கூட்டம் நடத்தினார். அதிமுகவும் கட்சியை வலுப்படுத்த கூட்டம் நடத்துவது போலத் தான் இதுவும். இதில் தவறில்லை.

அமித்ஷா தமிழகத்தைப் பற்றி தவறாக கூறியிருக்க மாட்டார், அவர் நன்றாகத்தான் கூறியிருப்பார். எச்.ராஜா தான் தவறாக மொழிபெயர்த்திருப்பார்,” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி