ஆப்நகரம்

என்மீது வழக்கு போட சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை: எச். ராஜா!

புதுகோட்டை விநாயகர் சிலை ஊர்வலத்தில் பேசியதை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 25 Sep 2018, 1:58 pm
புதுக்கோட்டை மாவட்டம் மெய்யப்புரத்தில் உள்ள குறிப்பிட்ட பகுதியில் விநாயகர் சிலையை கொண்டு செல்வதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. அதையும் மீறி விநாயகர் சிலையை எடுத்துச் செல்வோம் என எச்.ராஜா கூற, அதனை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
Samayam Tamil download (2)


இதனால் ஆத்திரமடைந்த எச்.ராஜா உயர் நீதிமன்றத்தையும், காவல் அதிகாரிகளையும் கடுமையான வார்த்தைகளால் தாக்கி பேசினார். இதனால் அவரைக் கைது செய்ய வேண்டும், நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 17 ஆம்தேதி பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. நீதிபதி சி.டி.செல்வம் தலைமையிலான அமர்வு வழக்கை தாமாக முன்வந்து விசாரித்தது.

இதில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா 4 வாரத்தில் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில்விநாயகர்ஊர்வலத்தில் பேசியதை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்துவிசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து எச். ராஜா தரப்புவழக்கறிஞர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.

மேலும் எச்.ராஜா மீது சிடி செல்வம் அமர்வு சுமோட்டா வழக்குப் பதிவு செய்ய முடியாது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மட்டுமே சுமோட்டா வழக்கு பதிவு செய்ய முடியும் எனக் கூறியிருக்கிறார்.

இந்நிலையில் விநாயகர் சிலை ஊர்வல வழக்கில் தன்னை பற்றி விசாரிக்க உயர் நீதிமன்றத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை என எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி