ஆப்நகரம்

H Raja: போலீஸ் பாதுகாப்புடன் பண்ணை வீட்டில் ரிலாக்ஸாக இருந்த எச். ராஜா!

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா போலீஸ் பாதுகாப்புடன் அவரது பண்ணைவீட்டில் தங்கியிருந்த தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 17 Sep 2018, 3:15 pm
சென்னை: பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா போலீஸ் பாதுகாப்புடன் அவரது பண்ணைவீட்டில் தங்கியிருந்த தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil 12


புதுக்கோட்டை மாவட்டத்தின் மெய்யபுரத்தின் பள்ளிவாசல் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்காக மேடை அமைப்பது தொடர்பாக போலீசார், நீதிமன்றத்தை எச்.ராஜா அசிங்கமாக திட்டினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால் திருமயம் காவல் நிலையத்தில் ராஜா மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து அவரை போலீஸ் தேடி வருகின்றனர்.
ஆனால் பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா தலைமறைவாகிவிட்டார். இதற்காக இன்று அவர், முன்ஜாமின் மனுதாக்கல் செய்ய வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் அவர் தனது பண்ணைவீட்டில்தான் தங்கி இருக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் தற்போது அவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. பண்ணை வீட்டுக்குள் போலீஸ் வாகனமும் நிறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி