ஆப்நகரம்

தயாநிதி மாறனின் ‘தாதா’ பிச்சையெடுத்தபோது - நீங்க அப்டி பேசலாமா எச்.ராஜா?

தேசிய அளவிலான பொறூப்பில் இருக்கும் எச்.ராஜா இப்படிச் செய்யலாமா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்/

Samayam Tamil 22 Apr 2020, 7:58 am
கொரோனா சமயத்தில் உலக நாடுகள் அனைத்தும் மக்களுக்கு உதவி செய்து வரும் நிலையில், பிரதமரும், முதலமைச்சரும் பிச்சை எடுத்து வருகின்றார்கள் என்றும், ஏற்கனவே பிச்சை எடுத்து வரும் மக்களிடம் மத்திய, மாநில அரசுகள் பிச்சை எடுக்கிறது என்றும் திமுக எம்.பி. தயாநிதி மாறன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக கலைஞரை பிச்சைக்காரர் என்று சொல்லும் தொனியில் படம் வெளியிட்டுள்ளார் எச்.ராஜா.
Samayam Tamil h.raja tweet on karunanithi


தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அந்தபடத்தில், கலைஞர் மு.கருணாநிதி உண்டியல் வசூல் செய்யும் படம் வெளியிடப்பட்டு இருந்தது. அதன் மேலே ‘தயாநிதி மாறனின் தாத்தா பிச்சை எடுத்தபோது’ என்றும் எழுதப்பட்டிருந்தது.


அண்மையில் ஆர்.எஸ்.பாரதி -எச்.ராஜா, தற்போது தயாநிதி மாறன் -எச்.ராஜா இதுமட்டுமல்லாமல் இன்னும் சில என அரசியல் களம் அவமானப்பட்டு நிற்கிறது. விபச்சாரம், பிச்சைக்காரர், மண்புழு என மாற்றி மாற்றி குழாயடிச் சண்டை போடும் அரசியலுக்காகவா இந்தத் தலைவர்கள் என்றும், அப்படியென்றால் இவர்களை ஏன் சகித்துக்கொள்ள வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

டெல்லி கொரோனா நோயாளிக்கு பிளாஸ்மா தெரபி: பலன் கிடைத்ததா?

மேலும், தேசிய அளவிலான பொறூப்பில் இருக்கும் எச்.ராஜா இப்படிச் செய்யலாமா என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.

அடுத்த செய்தி