ஆப்நகரம்

மதம் மாறிய கேரளப் பெண் ஹதியா, கணவரைச் சந்திக்க தடை!

காதல் திருமணம் செய்துகொண்டு மதம் மாறிய கேரளப் பெண் ஹதியா தனது ஹோமியோபதி படிப்பைத் தொடர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது

TNN 29 Nov 2017, 10:28 am
காதல் திருமணம் செய்துகொண்டு மதம் மாறிய கேரளப் பெண் ஹதியா தனது ஹோமியோபதி படிப்பைத் தொடர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
Samayam Tamil hadiya has been banned from meeting her husband in college
மதம் மாறிய கேரளப் பெண் ஹதியா, கணவரைச் சந்திக்க தடை!


கேரளாவைச் சேர்ந்த அகிலா அசோகன் என்ற இந்துப் பெண், சபீன் ஜஹான் என்ற முஸ்லீம் இளைஞரை மதம் மாறி திருமணம் செய்துகொண்டார். இதனால், அந்த இளைஞர் மீது லவ் ஜிஹாத் என்று குற்றம் சாட்டி கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து காதலர்கள் இருவரும் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பெற்றோரின் கட்டுப்பாட்டில் இருந்த ஹதியாவை விடுவித்து, அவரைத் தொடர்ந்து படிக்க அனுமதியளித்தது.

இதனையடுத்து அவர் சிவராஜ் சித்த மருத்துவக் கல்லூரியில் தற்போது அவர் சேர்க்கப்பட்டுள்ளார். கல்லூரியில் அவருக்குப் பாதுகாப்பாளராக கல்லூரி முதல்வர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கல்லூரியில் ஹதியாவைச் சந்திக்க அவரது பெற்றோருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவரை அவரது கணவர் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதனால், அவர் கணவரைச் சந்திக்க அனுமதி வழங்க வேண்டும் என்று இளைஞர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஹதியா கல்லூரியில் சேர்ந்ததும் அவரைச் சந்திக்க சேலம் செல்ல உள்ளதாக தற்போது கணவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Hadiya has been banned from meeting her husband in College.

அடுத்த செய்தி