ஆப்நகரம்

அரையாண்டு விடுமுறை நீட்டிப்பு... 4 ஆம் தேதி ஸ்கூலுக்கு வந்தா போதும்...

மற்றபடி, ​என்ன காரணத்தால் விடுப்பு நீட்டிக்கப்படுகிறது என்று ஏதும் இந்த அறிவிப்பாணையில் தெரிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ​

Samayam Tamil 30 Dec 2019, 7:04 pm
தமிழக பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வுகள் டிசம்பர் 23ஆம் தேதி முடிவடைந்த நிலையில், ஜனவரி 2 ஆம் தேதி வரை விமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இதனை 3 ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
Samayam Tamil half yearly exam leave


தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் அரையாண்டுத் தேர்வுகள் டிசம்பர் மாதம் 23 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதனைத் தொடர்ந்து டிசம்பர் 24ஆம் தேதி முதல் 2 ஆம் தேதி வரையில் அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த தொடர் விடுமுறைக்குப் பின்னர், ஜனவரி 2 ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்றும், இதற்கிடையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு என அடுத்தடுத்து விடுமுறைகள் வருவதால், பள்ளிகளும் அந்த நேரத்தில் இயங்காது என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், 3 ஆம் தேதி வரை விடுமுறையை நீட்டித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.



இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2019-20 அரையாண்டுத் தேர்வுகள் முடிந்து பள்ளிகள் 04.01.2020 அன்று திறக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மற்றபடி, என்ன காரணத்தால் விடுப்பு நீட்டிக்கப்படுகிறது என்று ஏதும் இந்த அறிவிப்பாணையில் தெரிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அரையாண்டு விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறந்ததும், அன்றைய தினமே மூன்றாம் பருவத்துக்கான புத்தங்களை மாணவர்களுக்கு வழங்க அரசு மற்றும் அர்ச்சு உதவி பெறும் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி