சிறுமி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தஷ்வந்த், குற்றவாளி என்று செங்கல்பட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
சென்னை போரூரை அடுத்த மதநந்தபுரத்தை சேர்ந்தவர் பாபு. இவரது 6 வயது மகள் ஹாசினி. கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மாயமானார். இதுகுறித்து ஹாசினியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்து இருந்தனர்.
விளையாட வெளியில் சென்ற குழந்தை மீண்டும் வீடு திரும்பவில்லை. போலீசார் அங்கிருக்கும் சிசிடிவி காட்சிகளை பார்த்தனர். அப்போது குழந்தை ஹாசினி விளையாடி விட்டு அபார்ட்மெண்ட்டுக்குள் வருவது பதிவாகி இருந்தது. ஆனால், உள்ளே வந்தவர் எங்கே சென்றார் என்பது தெரியவில்லை. இதைத் தொடர்ந்து அபார்ட்மெண்டில் குடியிருந்து வரும் தஷ்வந்த் என்ற இளைஞர் இரவு 9 மணியளவில் கையில் ஒரு பையுடன் வெளியே சென்றுவிட்டு, அரை மணி நேரத்தில் திரும்பியது தெரிய வந்தது.
இதையடுத்து தொடர்ந்து தஷ்வந்திடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஹாசினிக்கு பாலியல் தொந்திரவு கொடுத்து கொலை செய்த விஷயம் தெரிய வந்தது.
இதனையடுத்து, தஷ்வந்தை குண்டர் சட்டத்தில் அடைக்க மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார். தொடர்ந்து, தஷ்வந்த் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது தந்தை சேகர் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், தஷ்வந்துக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு விசாரணையின் போது குற்றத்தை நிரூபிப்பதற்கான முறையான ஆவணங்களை போலீசார் தாக்கல் செய்யாததால் தஷ்வந்த் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்தே, தஷ்வந்திற்கு ஜாமின் கிடைத்தது.
ஜாமினில் தஷ்வந்த் வெளிவந்த நிலையில், தன் தாயையும் கொன்று, வீட்டிலிருந்த நகை பணத்துடன், தலை மறைவானார்.
தஷ்வந்த் மும்பையில் கைது செய்யப்பட்டாா். ஆனால் காவல் துறையின் பிடியில் இருந்து லாபகமாக தப்பித்து விட்டாா். பின்னா் மீண்டும் அவா் கைது செய்யப்பட்டு தமிழகம் அழைத்து வரப்பட்டாா்.
இந்நிலையில் இது தொடா்பான வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றுவிட்ட நிலையில் செங்கல்பட்டு நீதிமன்ற நீதிபதி தஷ்வந்த் மீதான தண்டனை விவரத்தை இன்று மதியம் 3 மணிக்கு அறிவிக்கப்பட்டது.
அதன்படி, போலீசார் கைப்பற்றி ஆதாரங்களின் அடிப்படையில், ஆள்கடத்தல், கொலை, பாலியல் வன்கொடுமை உட்பட 5 சட்டப்பிரிவுகளின் கீழ் தஷ்வந்த் தான் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது
சென்னை போரூரை அடுத்த மதநந்தபுரத்தை சேர்ந்தவர் பாபு. இவரது 6 வயது மகள் ஹாசினி. கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மாயமானார். இதுகுறித்து ஹாசினியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்து இருந்தனர்.
விளையாட வெளியில் சென்ற குழந்தை மீண்டும் வீடு திரும்பவில்லை. போலீசார் அங்கிருக்கும் சிசிடிவி காட்சிகளை பார்த்தனர். அப்போது குழந்தை ஹாசினி விளையாடி விட்டு அபார்ட்மெண்ட்டுக்குள் வருவது பதிவாகி இருந்தது. ஆனால், உள்ளே வந்தவர் எங்கே சென்றார் என்பது தெரியவில்லை. இதைத் தொடர்ந்து அபார்ட்மெண்டில் குடியிருந்து வரும் தஷ்வந்த் என்ற இளைஞர் இரவு 9 மணியளவில் கையில் ஒரு பையுடன் வெளியே சென்றுவிட்டு, அரை மணி நேரத்தில் திரும்பியது தெரிய வந்தது.
இதையடுத்து தொடர்ந்து தஷ்வந்திடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஹாசினிக்கு பாலியல் தொந்திரவு கொடுத்து கொலை செய்த விஷயம் தெரிய வந்தது.
இதனையடுத்து, தஷ்வந்தை குண்டர் சட்டத்தில் அடைக்க மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார். தொடர்ந்து, தஷ்வந்த் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது தந்தை சேகர் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், தஷ்வந்துக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு விசாரணையின் போது குற்றத்தை நிரூபிப்பதற்கான முறையான ஆவணங்களை போலீசார் தாக்கல் செய்யாததால் தஷ்வந்த் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்தே, தஷ்வந்திற்கு ஜாமின் கிடைத்தது.
ஜாமினில் தஷ்வந்த் வெளிவந்த நிலையில், தன் தாயையும் கொன்று, வீட்டிலிருந்த நகை பணத்துடன், தலை மறைவானார்.
தஷ்வந்த் மும்பையில் கைது செய்யப்பட்டாா். ஆனால் காவல் துறையின் பிடியில் இருந்து லாபகமாக தப்பித்து விட்டாா். பின்னா் மீண்டும் அவா் கைது செய்யப்பட்டு தமிழகம் அழைத்து வரப்பட்டாா்.
இந்நிலையில் இது தொடா்பான வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றுவிட்ட நிலையில் செங்கல்பட்டு நீதிமன்ற நீதிபதி தஷ்வந்த் மீதான தண்டனை விவரத்தை இன்று மதியம் 3 மணிக்கு அறிவிக்கப்பட்டது.
அதன்படி, போலீசார் கைப்பற்றி ஆதாரங்களின் அடிப்படையில், ஆள்கடத்தல், கொலை, பாலியல் வன்கொடுமை உட்பட 5 சட்டப்பிரிவுகளின் கீழ் தஷ்வந்த் தான் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது