ஆப்நகரம்

எனது குழந்தைக்கு நடந்தது வேறு யாருக்கும் நேரக் கூடாது: ஹாசினி தந்தை கண்ணீர்!!

''எனக்கு நியாயம் கிடைத்து இருக்கிறது. இந்த தீர்ப்பு எனக்கு திருப்தி அளிக்கிறது'' என்று தஷ்வந்தால் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட ஹாசினியின் தந்தை பாபு இன்று தெரிவித்தார்.

Samayam Tamil 19 Feb 2018, 5:10 pm
''எனக்கு நியாயம் கிடைத்து இருக்கிறது. இந்த தீர்ப்பு எனக்கு திருப்தி அளிக்கிறது'' என்று தஷ்வந்தால் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட ஹாசினியின் தந்தை பாபு இன்று தெரிவித்தார்.
Samayam Tamil hasini murder judgement this should not happen to anyone else says hasinis father babu
எனது குழந்தைக்கு நடந்தது வேறு யாருக்கும் நேரக் கூடாது: ஹாசினி தந்தை கண்ணீர்!!


சென்னை, போரூரில் 7 வயது குழந்தை ஹாசினியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த தஷ்வந்துக்கு இன்று செங்கல்பட்டு மகளை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு அளித்துள்ளது.

இதையடுத்து, நீதிமன்றத்திற்கு வெளியே தீர்ப்பை அறிந்து கொள்ள காத்திருந்த குழந்தை ஹாசினியின் தந்தை கூறுகையில், ''எனக்கு நியாயம் கிடைத்து இருக்கிறது. தீர்ப்பு திருப்தி அளிக்கிறது. ஓராண்டு கழித்து நியாயம் கிடைத்து இருக்கிறது. நான் இந்த வழக்கை தொடுத்த போது வழக்கை தொடுக்க வேண்டாம் தாமதாமாகும் என்று தெரிவித்து இருந்தனர். ஆனால், நான் நியாயம் கிடைக்கும் என்று வழக்கு தொடுத்தேன்.

அவன் ஒரு மனிதனே இல்லை. என்னுடைய மகளையும் கொன்று, அவனது தாயையும் கொன்றுள்ளான். அவன் எப்படி மனிதனாக இருக்க முடியும். இப்படிபட்டநீதிமன்ற தீர்ப்பால் எனது போராட்டத்துக்கு தீர்வு கிடைத்துள்ளது. எனது மகளுக்கு ஏற்பட்டது போல் வேறு யாருக்கும் ஏற்படக் கூடாது. நியாயம் கிடைக்க போராடிய மாங்காடு காவல்துறைக்கும், ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.

அடுத்த செய்தி