ஆப்நகரம்

உயர்நீதிமன்ற தீர்ப்புகள் இனி தமிழில்... ரெடியாகும் சிறப்பு சாப்ட்வேர் - சட்டத்துறை அமைச்சர்!

உயர்நீதிமன்றத்தில் வெளியிடப்படும் தீர்ப்புகள் தமிழ் மொழியிலும் இடம்பெறும் வகையில், தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்ததை அடுத்து, சட்டத்துறை அமைச்சர் அதற்கு உறுதிமொழி கொடுத்துள்ளார்.

Samayam Tamil 3 Sep 2019, 4:45 pm
சென்னை பசுமை வழி சாலையில் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், முதலமைச்சர் பழனிசாமி ஆக்கப்பூர்வமான வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
Samayam Tamil CV Shanmugam


ஒரு அரசுக்கு வெளிநாட்டு முதலீடுகள் அவசியம். வெளிநாட்டினரை ஈர்க்கும் வகையில், நாம் அவர்களை தேடிச் செல்ல வேண்டும். இத்தகைய நல்ல விஷயத்தை பொறுத்துக் கொள்ள முடியாமல், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பொறாமையால் பேசி வருகிறார்.

காலியாகும் அமமுக கூடாரம்; டிடிவிக்கு அதிர்ச்சியூட்டிய மற்றொரு பிரமுகர்!

அவரது பேச்சுக்கு எல்லாம் பதில் சொல்லிக் கொண்டு இருக்க முடியாது. நீதிமன்றத்தின் தீர்ப்புகள் மொழி மாற்றம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முதல்கட்டமாக உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழில் மொழி பெயர்ப்பதில் ஏதேனும் சிக்கல் இருந்தால், அதற்கு உதவ தமிழக அரசு தயாராக இருக்கிறது. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் வெளிவர பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கல்விக் கடன் திட்டத்தைச் சீர்குலைக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தோடு ஸ்டேட் வங்கி ஒப்பந்தம்!

இதுதொடர்பாக தமிழக அரசுக்கு தலைமை நீதிபதி கடிதம் எழுதியுள்ளார். விரைவில் தீர்ப்புகள் தமிழில் வரும். இதற்கான மென்பொருள் சோதனை செய்யப்பட்டு வருகிறது. 7 பேர் விடுதலையில் ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார் என்று நம்பிக்கை கொள்வோம் என்று கூறினார்.

ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு கூடுதல் நிதி- ராமதாஸ் வலியுறுத்தல்!

அடுத்த செய்தி