ஆப்நகரம்

மதுரையில் ஆா்.எஸ்.எஸ். அமைப்பினா் ஊா்வலம் நடத்த நீதிமன்றம் அனுமதி

மதுரையில் ஆா்.எஸ்.எஸ். அமைப்பினா் பேரணி நடத்த காவல்துறையினா் அனுமதி மறுத்திருந்த நிலையில் உயா்நீதிமன்ற மதுரைகிளை பேரணிக்கு அனுமதி அளித்துள்ளது.

TOI Contributor 11 Oct 2017, 11:01 pm
மதுரையில் ஆா்.எஸ்.எஸ். அமைப்பினா் பேரணி நடத்த காவல்துறையினா் அனுமதி மறுத்திருந்த நிலையில் உயா்நீதிமன்ற மதுரைகிளை பேரணிக்கு அனுமதி அளித்துள்ளது.
Samayam Tamil hc bench given permission to rss march in madurai
மதுரையில் ஆா்.எஸ்.எஸ். அமைப்பினா் ஊா்வலம் நடத்த நீதிமன்றம் அனுமதி


ஒவ்வொரு ஆண்டும் ஆா்.எஸ்.எஸ். அமைப்பின் ஆண்டு விழா விஜய தசமி பண்டிகையின் போது கொண்டாடப்படுவது வழக்கம். விழாவின் போது ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பேரணி, பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு மதுரையில் பேரணி நடத்துவதற்கு அம்மாவட்ட காவல் துறையினர் அனுமதி மறுத்து விட்டனர். இதனையடுத்து, அந்த அமைப்பின் சார்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பேரணிக்கு அனுமதி கோாி வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினா் பேரணி நடத்துவதற்கு நீதிமன்றம் இன்று அனுமதியளித்துள்ளது. மதுரை புறவழிச்சாலையில் இருந்து பழங்காநத்தம் வரை பேரணி செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பேரணியின் போது போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும் காவல்துறையினருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், பேரணியில் கலந்து கொள்பவர்கள் கையில் கம்பு, லத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் எதையும் எடுத்துச் செல்லக்கூடாது என்றும், முழக்கங்கள் எழுப்பாமல் அமைதியான முறையில் பேரணியை நடத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முன்னதாக பேரணி நடைபெறும் பட்சத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு அமைதிக்கு குந்தகம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று பல்வேறு தரப்பினரும் கருத்து தொிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி