ஆப்நகரம்

சிலை கடத்தல் வழக்கில் தமிழக அரசிற்கு புதிய உத்தரவு பிறப்பித்த உயர்நீதிமன்றம்

தமிழக அரசிற்கும், தமிழக காவல்துறைக்கும் சிலை கடத்தில் விவகாரங்கள் தொடர்பாக நடைபெற்ற கடித பரிமாற்றங்களை குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 23 Aug 2018, 2:52 pm
தமிழக அரசிற்கும், தமிழக காவல்துறைக்கும் சிலை கடத்தில் விவகாரங்கள் தொடர்பாக நடைபெற்ற கடித பரிமாற்றங்களை குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil 65070188
சிலை கடத்தல் விவகாரம்- சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு


சிலை கடத்தல் வழக்கை சிபிஐ-க்கு மாற்றப்பட்டது தொடர்பாக தமிழக அரசிற்கும் மற்றும் காவல்துறைக்கு இடையே நடத்த கடிதப் பரிமாற்றங்கள் குறித்த ஆவணங்களை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அது தொடர்பான வழக்கை இன்று விசாரணைக்கு ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம், கடித பரிமாற்றங்களை மனு தாரருக்கு காட்ட முடியாது என்றும், பதிலாக நீதிமன்ற பார்வைக்கு சமர்பிக்க தயாராக உள்ளதாக தமிழக அரசு மற்றும் தமிழக காவல்துறை கூறியது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், சிலை கடத்தல் வழக்கு தொடர்பாக நடைபெற்ற கடித பரிமாற்றங்களை உயர்நீதிமன்றத்தில் சமர்பிக்க உத்தரவிட்டனர்.

மேலும் இந்த வழக்கில் சிபிஐக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்ப மனுதாரரான ராஜேந்திரனுக்கும் நீதிபதிகள் அனுமதி அளித்து உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 7 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

அடுத்த செய்தி