ஆப்நகரம்

மறைமுக தேர்தலுக்கு எதிரான வழக்கு: ஒரு வாரத்திற்கு ஒத்தி வைப்பு

மறைமுக தேர்தலுக்கு தடைக்கோரி அளிக்கப்பட்ட மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கை ஒரு வாரத்துக்கு ஒத்தி வைத்துள்ளது.

Samayam Tamil 26 Nov 2019, 2:05 pm
உள்ளாட்சி தேர்தலில் மேயர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படும் என தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் சட்டத்திற்கு விரோதமான இந்த தேர்தல் முறையை நடக்க அனுமதிக்ககூடாதென முகமது ரஸ்லி என்ற வழக்கறிஞர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
Samayam Tamil மறைமுக தேர்தலுக்கு எதிரான வழக்கு: ஒரு வாரத்திற்கு ஒத்தி வைப்பு


இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் முன்பு மனுதாரரும், அரசு தரப்பு வக்கீலும் ஆஜராகினர்.

மனுதாரர் வாதாடுகையில் '' மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் கவுன்சிலர்களால் தேர்ந்தெடுக்கப்படுவது மிக பெரிய குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும். சட்ட விரோதமாக மறைமுக தேர்தலை நடத்த அனுமதிக்கக்கூடாது என்று கூறினார்.

சர்க்கரை ரேஷன் அட்டையை அரிசி அட்டையாக மாற்ற அவகாசம் நீட்டிப்பு - தமிழக அரசு!

அதற்கு அரசு தரப்பில் '' உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதல் அடிப்படையிலேயே மறைமுகத் தேர்தல் நடத்தப்படுகிறதென விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் மறைமுக தேர்தலை குறித்த வழக்குகளை உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தள்ளுபடி செய்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.

உழைப்புக்குரிய தொகையை உடனே வழங்கிடுக: பாஜகவுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

இந்நிலையில் இரு வாதங்களையும் விசாரித்த நீதிபதிகள் வழக்கை ஒரு வாரத்துக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

அடுத்த செய்தி