ஆப்நகரம்

சுகாதாரத்துறை செயலாளர் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு..!

இடமாற்றம் செய்யப்பட்ட மருத்துவர்களை மீண்டும் ஏற்கனவே பணியாற்றிய இடத்திற்கு மாற்றாததால் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Samayam Tamil 29 Aug 2020, 5:03 pm
தமிழகத்தில் ஊதிய உயர்வு உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அரசு மருத்துவர்கள் கடந்த ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவர்களுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயாபாஸ்கர் மற்றும் அப்போதைய செயலாளர் பீலா ராஜேஷ் ஆகியோர் பேசுவார்த்தை நடத்திய பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.
Samayam Tamil radhakrishnan


அதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 118 மருத்துவர்கள் அதிரடியாக இடம் மாற்றம் செய்யப்பட்டனர். இதனால் தொலைதூர மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டும், சாதாரண பதவிகளில் அமர்த்தப்பட்டும் மருத்துவர்களை அரசு பழி வாங்குவதாக உயர் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட மருத்துவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.

அதையடுத்து, இடமாற்றம் செய்தவர்களை மீண்டும் ஏற்கெனவே பணியாற்றிய இடத்திற்கு மாற்றம் செய்யகோரி சுகாதாரத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், இதுவரை மருத்துவர்கள் இடமாற்றம் செய்யப்படாததால் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் மருத்துவ கல்வி இயக்குநர் டாக்டர் நாராயணபாபு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

தேர்வுக்கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கும் மதிப்பெண் வழங்க வேண்டும் - ஸ்டாலின்

இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிமன்றம் செப்டம்பர் 4ம் தேதி ராதாகிருஷ்ணன் மற்றும் மருத்துவ கல்வி இயக்குநர் டாக்டர் நாராயணபாபுவும் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

அடுத்த செய்தி