ஆப்நகரம்

வரும் 20ஆம் தேதி வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடை: உயர்நீதிமன்றம்!

தமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

TNN 14 Sep 2017, 3:05 pm
சென்னை: தமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil hc stay for floor test in tamilnadu assembly
வரும் 20ஆம் தேதி வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடை: உயர்நீதிமன்றம்!


தமிழக சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வலியுறுத்தி, டிடிவி தரப்பு மற்றும் திமுக தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் டிடிவி தரப்பு எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதா? என்று நீதிபதிகள் அரசு தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த தமிழக அரசு, டிடிவி தரப்பு எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தொடங்கிவிட்டதாக தெரிவித்தது. இதையடுத்து நீதிமன்றத்தில் திமுக தரப்பு வாதம் முன்வைக்கப்பட்டது.

அதில் தினகரன் தரப்பு எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்பிருப்பதால், அதன் பிறகு நடத்தப்படும் வாக்கெடுப்பு அரசுக்கு சாதகமாக அமையும் எனக் கூறி திமுக எதிர்ப்பு தெரிவித்தது.

டிடிவி தரப்பு மற்றும் மு.க.ஸ்டாலின் தரப்பு கோரிக்கையை ஏற்று, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வரும் 20ஆம் தேதி வரை தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் ஆளுநரின் செயலாளர், பேரவை செயலாளரிடம் விளக்கம் பெற்று புதன்கிழமை தெரிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதையடுத்து டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ, ஸ்டாலின் தொடர்ந்த வழக்கை, வரும் 20ஆம் தேதி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

HC stay for floor test in Tamilnadu assembly.

அடுத்த செய்தி