ஆப்நகரம்

சுங்கச்சாவடிகளில் விஐபி.க்கள், நீதிபதிகளுக்கு தனி வழி – உயா்நீதிமன்றம் உத்தரவு

நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளில், நீதிபதிகள், வி.ஐ.பி.க்களின் வாகனங்களை தனி வழியில் அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 30 Aug 2018, 9:37 am
நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளில், நீதிபதிகள், வி.ஐ.பி.க்களின் வாகனங்களை தனி வழியில் அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil Chennai Highcourt


தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் நிலுவைத் தொகை செலுத்துவது தொடா்பான வழக்கு சென்னை உயா்நீதிமன்றத்தில் புதன் கிழமை விசாரணைக்கு வந்தது. நீதிபதி குலுவாடி ரமேஷ், முரளிதரன் ஆகியோா் அமா்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது நீதிபதிகள் கூறுகையில், நாட்டில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் நீதிபதிகள், வி.ஐ.பி.க்கள் வரிசையில் நின்று ஆவணங்களை காண்பித்த பின்பு செல்லவேண்டியதாக உள்ளது. 10 முதல் 15 நிமிடங்கள் வரை சுங்கச்சாவடிகளில் காத்திருக்கும் நீதிபதிகள் சில சங்கடங்களை சந்திக்க வேண்டிய சூழல் உள்ளது.

வாகனங்களில் நீதிபதிக்கான சின்னம் இடம்பெற்றிருந்தாலும், ஓட்டுநா்கள் தங்கள் உரிமத்தை காண்பித்த பின்பும் ஒருசில நேரங்களில் சுங்கச்சாவடிகளில் தரக்குறைவாக நடந்து கொள்வதாக நீதிபதிகள் கருத்து தொிவித்தனா். இதனைத் தொடா்ந்து நாட்டில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் அவசர கால வழியில் அமா்வு நீதிபதிகள், வி.ஐ.பி.க்களின் வாகனங்களை அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனா்.

உத்தரவு நகலை மத்திய அரசு மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள் அடுத்த விசாரணையை 4 வார காலத்திற்கு ஒத்தி வைத்தனா்.

அடுத்த செய்தி