ஆப்நகரம்

தாராள மனமுடைய தொழிலதிபர்களில் தமிழகத்தின் ஷிவ்நாடார் முதலிடம்!

ஹெச்சிஎல் நிறுவனரும் தமிழகத்தைச் சேர்தவருமான ஷிவ் நாடார் கடந்த ஆண்டில் மட்டும் 630 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளார்.

TOI Contributor 31 Mar 2017, 1:58 pm
ஹெச்.சி.எல்., நிறுவனரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான ஷிவ் நாடார் கடந்த ஆண்டில் மட்டும் 630 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளார்.
Samayam Tamil hcls shiv nadar was most philanthropic indian of 2016
தாராள மனமுடைய தொழிலதிபர்களில் தமிழகத்தின் ஷிவ்நாடார் முதலிடம்!


நாட்டிற்காகவும், மக்களுக்காகவும் அறப்பணிகளுக்காக நன்கொடை வழங்கிய தொழிலதிபர்கள் குறித்து மனித உரிமைகள் அமைப்பு ஒன்று ஆய்வு நடத்தியுள்ளது. இதில் தமிழகத்தின் ஷிவ்நாடார் முதலிடத்தை பிடித்துள்ளார். 73 ஆயிரம் கோடி சொத்துக்களை கொண்டுள்ள அவர் நாட்டின் பெரும் பணக்காரர்களில் 5வது இடத்தை பிடித்துள்ளார்.

கடந்த ஆண்டில் மட்டும் மக்களுக்காகவும், நாட்டு நலப்பணிக்களுக்காகவும் தனது அறக்கட்டளைகள் மூலம் 630 கோடி ரூபாய் வரை செலவிட்டுள்ளார். எஸ்.எஸ்.என் கல்லூரி, எஸ்.எஸ்.என் அறக்கட்டளை ஆகியவற்றின் மூலம் ஏழை எளிய மக்களுக்காக சுகாதாரத்துறையில் அதிக முதலீடுகளை ஒதுக்கி அறப்பணியாற்றி வருகிறார்.

நாட்டில் முதிலிடத்தில் உள்ள பெரும் பணக்காரர்களான ரிலையன்ஸ் நிறுவனத்தின் அம்பானி சகோதர்களும், லட்சுமி மிட்டல், விப்ரோ நிறுவன தலைவர் அஜிம் பிரேம்ஜி என அனைவரும் குறைந்த அளவிலேயே அறப்பணிகளுக்கு நன்கொடை வழங்குவது தெரியவந்துள்ளது.

ஷிவ்நாடருக்கு அடுத்தபடியாக, இன்ஃபோசிஸ் நிறுவனத் தலைவர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் 313 கோடிரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளார். இதேபோல், முகேஷ் அம்பானி 303 கோடி ரூபாய் நிதியை கடந்த ஆண்டில் நன்கொடையாக வழங்கியுள்ளார். மேலும், பஜாஜ் நிறுவனம், கல்வித்துறைக்காக 244 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளது. ஸ்வதேஸ் அமைப்பின் தலைவர் ரோனி ஸ்குருவாலா நகர்புற வளர்ச்சித் துறைக்காக 160 கோடி ரூபாயும், கோத்ரெஜ் குழுமத்தினர் வாழ்வாதார வரிவாக்கதுறைக்காக 75 கோடி ரூபாயும் நன்கொடையாக கொடுத்துள்ளனர்.

நாட்டு நலனில் அக்கறை கொண்ட 10 தொழிலதிபர்களின் மொத்த முதலீடு கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்துள்ளது. 2015ம் ஆண்டில் 34,077 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கிய பெரு முதலாளிகள் கடந்த ஆண்டில் 2,334 கோடி ரூபாய் மட்டுமே நன்கொடை வழங்கியுள்ளனர். பெரு நன்கொடையாளர்களின் எண்ணிக்கையும் ஆண்டுக்காண்டு குறைந்துகொண்டே வருகிறது. 2014ம் ஆண்டு 50 பேரும், 2015ம் ஆண்டில் 36 பேரும் கடந்த ஆண்டில் 27 பேரும் என குறந்துள்ளது.

அடுத்த செய்தி