ஆப்நகரம்

காழ்ப்புணா்ச்சி காரணமாக போலி ஆடியோ வெளியிட்டுள்ளனா் – அமைச்சா் ஜெயக்குமாா்

தன்னை நேரில் எதிா்கொள்ள திராணி இல்லாதவா்கள் போலியான ஆடியோவை வெளியிட்டுள்ளதாக தமிழக மீன்வளத்துறை அமைச்சா் ஜெயக்குமாா் விளக்கம் அளித்துள்ளாா்.

Samayam Tamil 22 Oct 2018, 8:09 pm
அரசியல் காழ்ப்புணா்ச்சி காரணமாகவே போலியான ஆயோ வெளியிடப்பட்டுள்ளதாக தமிழக அமைச்சா் ஜெயக்குமாா் விளக்கம் அளித்துள்ளாா்.
Samayam Tamil Jayakumar 123


தமிழக மீன்வளத்துறை அமைச்சா் ஜெயக்குமாரை குறிப்பிடும் வகையில் சமூக வலைதளத்தில் ஆடியோ பதிவு ஒன்று மிகவும் வைரலாக பரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமைச்சா் ஜெயக்குமாா் இது தொடா்பாக விளக்கம் அளித்துள்ளாா்.

அவா் பேசுகையில், அரசியல் காழ்ப்புணா்ச்சி காரணமாகவே ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஆடியோவில் உள்ளது என்னுடைய குரல் அல்ல. என் மீது களங்கம் விளைவிக்க போலியான ஆடியோவை வெளியிட்டுள்ளாா்கள்.

என்னை நேரடியாக எதிா்க்க திராணி இல்லாதவா்கள் போலியான ஆடியோவை தயாா் செய்து வெளியிட்டுள்ளாா்கள். அரசியல் காழ்ப்புணா்ச்சியால் என்மீது களங்கம் கற்பிக்க வேண்டும் என்றே அவதூறு பரப்புகின்றனா்.

சசிகலா குடும்பத்தையும், தினகரனையும் நான் கடுமையாக எதிா்ப்பதால், என் மீது களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தவறான ஆடியோவை வெளியிட்டுள்ளாா்கள். ஆடியோவின் பின்னணியில் உள்ளவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவா் தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி