ஆப்நகரம்

வேலூரில் அவலம்: கழிப்பறையை சுத்தம் செய்யும் அரசு பள்ளி மாணவர்கள்!

வேலூர் மாவட்டத்தில், அரசு ஆரம்ப பள்ளி ஒன்றில் பள்ளி மாணவர்கள் கழிப்பறை மற்றும் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்யும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 10 Jan 2019, 5:27 pm
வேலூர் மாவட்டத்தில், அரசு ஆரம்ப பள்ளி ஒன்றில் பள்ளி மாணவர்கள்கழிப்பறை மற்றும்பள்ளி வளாகத்தை சுத்தம் செய்யும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil 67466158


வேலூர் மாவட்டத்தில் உள்ள பத்தளப்பள்ளிஎன்ற கிராமத்தில்அரசு ஆரம்பப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 250மாணவர்கள் படித்து வருகின்றனர். பொன் வல்லுவன் என்பவர் இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

பள்ளியில் பொங்கல் விழா நடைபெற இருப்பதால், பள்ளி வளாகம், மற்றும் கழிப்பறைகளை சுத்தம் செய்யும் வேலைகள் நடைபெற்று வந்தது. சுத்தம் செய்யும் பணியாளர்கள் விடுப்பு எடுத்ததால், பள்ளியை சுத்தம் செய்யுமாறு தலைமை ஆசிரியர், ஆசியர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் வற்புறுத்தியதன் பெயரில் பள்ளி மாணவர்கள் வகுப்பறை மற்றும் கழிப்பறையை சுத்தம் செய்ததாக கூறப்படுகிறது.மாலையில் அதிக நேரம் ஆகியும் குழந்தைகள் வீட்டுக்கு வரவில்லை என்று பள்ளிக்கு சென்ற பெற்றோர்கள், குழந்தைகள் சுத்தம் செய்வதை பார்த்து அதிர்சியடைந்தனர்.

இதுகுறித்துபெற்றோர்கள் ஆசியர்களிடத்தில்கேட்டபோது உரியவிளக்கம் அளிக்கவில்லை. மேலும்இந்த சம்பவம் தொடர்பாக பதில் அளித்ததலையாசிரியர்பொன் வள்ளுவன், இது ஆசிரியர்களின் தவறு என்று கூறிவிட்டார்.

அடுத்த செய்தி