திருவள்ளூரில் பள்ளியின் கழிப்பறையை மாணவிகளைக் கொண்டு சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியை மணிமேகலை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் ஆர்.எம்.ஜெயின் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1,000-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் மாணவிகள் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் பயன்படுத்த 10 கழிப்பறைகள் உள்ளன.
பள்ளித்தலைமை ஆசிரியை, மணிமேகலை அவ்வப்போது மாணவிகளை கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்தாராம். கடந்த வெள்ளிக்கிழமை (கடந்த நவம்பர் 24 தேதி ) மாணவிகளை வெறும் கையால், கழிப்பறையை சுத்தம் செய்யுமாறு கூறியுள்ளார்.
இதனித்தொடர்ந்து அந்த மாணவிகள் கழிவறையை சிறு துணியை வைத்து கழிப்பறையை சுத்தம் செய்தனர். மாணவிகள் கழிப்பறையை சுத்தம் செய்வது போன்ற திரைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் பள்ளியில் விசாரணை நடத்தினர். கழிப்பறையைச் சுத்தம் செய்த மாணவியர் மற்றும் ஆசிரியர்களிடம் தனித் தனியாக விசாரணை நடத்தி, அதை கடிதமாக எழுதி பெற்றுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை மணிமேகலையை பணியிடை நீக்கம் செய்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
திருவள்ளூர் ஆர்.எம்.ஜெயின் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1,000-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் மாணவிகள் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் பயன்படுத்த 10 கழிப்பறைகள் உள்ளன.
பள்ளித்தலைமை ஆசிரியை, மணிமேகலை அவ்வப்போது மாணவிகளை கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்தாராம். கடந்த வெள்ளிக்கிழமை (கடந்த நவம்பர் 24 தேதி ) மாணவிகளை வெறும் கையால், கழிப்பறையை சுத்தம் செய்யுமாறு கூறியுள்ளார்.
இதனித்தொடர்ந்து அந்த மாணவிகள் கழிவறையை சிறு துணியை வைத்து கழிப்பறையை சுத்தம் செய்தனர். மாணவிகள் கழிப்பறையை சுத்தம் செய்வது போன்ற திரைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் பள்ளியில் விசாரணை நடத்தினர். கழிப்பறையைச் சுத்தம் செய்த மாணவியர் மற்றும் ஆசிரியர்களிடம் தனித் தனியாக விசாரணை நடத்தி, அதை கடிதமாக எழுதி பெற்றுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை மணிமேகலையை பணியிடை நீக்கம் செய்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.