ஆப்நகரம்

வங்கி முன்பு மொட்டையடித்து காங்., தொண்டர் நூதன போராட்டம்

ரூபாய் நோட்டுகள் விவகாரம் தொடர்பாக வங்கி முன்பு மொட்டையடித்து காங்கிரஸ் தொண்டர் ஒருவர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

TNN 16 Nov 2016, 4:37 pm
வேலூர்: ரூபாய் நோட்டுகள் விவகாரம் தொடர்பாக வங்கி முன்பு காங்கிரஸ் தொண்டர் ஒருவர் மொட்டையடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Samayam Tamil head shave infront of sbi congress person protest
வங்கி முன்பு மொட்டையடித்து காங்., தொண்டர் நூதன போராட்டம்


கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கை என, ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு திடீரென அதிரடியாக அறிவித்துள்ளது. ரூபாய் நோட்டுகளை மாற்ற, மாற்று வழிகளை மத்திய அரசு அறிவித்திருந்தாலும், பல்வேறு தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, வேலூர் மாவட்டம் குடியாத்தத்திலுள்ள பாரத ஸ்டேட் வங்கியின் முன்பு காங்கிரஸ் தொண்டர் ஒருவர் மொட்டையடித்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டார்.

ரூபாய் நோட்டுகள் விவகாரம் தொடர்பாக, வங்கி முன்பு மொட்டையடித்து, காங்கிரஸ் தொண்டர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Head shave infront of SBI: Congress person protest

அடுத்த செய்தி