ஆப்நகரம்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,352 பேருக்கு பாசிட்டிவ்..!

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு, இறப்பு மற்றும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 29 Aug 2020, 6:31 pm
தமிழகத்தில் இன்று மேலும் 6,352 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,15,590 ஆக அதிகரித்துள்ளது.
Samayam Tamil file pic


தமிழகத்தில் 7வது கட்ட ஊரடங்கு முடிவடையுள்ள நிலையில் மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக மருத்துவக்குழு, மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் நடத்திய ஆலோசனையில் தகவல் வந்துள்ளது. கொரோனா பரவல் உள்ளவரை ஊரடங்கு தகர்க்க வாய்ப்பில்லை என முந்தைய அறிவிப்புகளில் கூறப்பட்டிருந்தது.

ஆனால், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏறுமுகமாகவும், இறங்குமுகமாகவும் இருக்க, ஒரே நிலையில் கட்டுப்படவில்லை. குறிப்பாக சென்னையில் இன்று 1285 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய நாளில் 13,653 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.


மாநிலம் முழுக்க கடந்த 24 மணி நேரத்தில் 87 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த பலி எண்ணிக்கை 7137 ஆக அதிகரித்துள்ளது. அதுபோல, கடந்த 24 மணி நேரத்தில் 6,045 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், குணமானோர்களின் மொத்த எண்ணிக்கை 3,55,727 ஆக உயர்ந்துள்ளது.

அண்ணாமலை ஐபிஎஸ்ஸுக்கு பாஜகவில் முக்கிய பதவி!!

தமிழகத்தில் தற்போது கொரோனா சிகிச்சையிலும், தனிமைப்படுத்தப்படும் 52,726 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகளை குறித்த முக்கிய அறிவிப்புகளை தமிழக அரசு விரைவில் வெளியிடவுள்ளது.

அடுத்த செய்தி