ஆப்நகரம்

நீட் தேர்வில் அடுத்து என்ன? மாறி மாறி விளக்கம் கேட்பதால் நீடிக்கும் குழப்பம்...!

நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், தலைமை வழக்கறிஞரிடம் கருத்து கேட்டுள்ளது.

TNN 18 Aug 2017, 2:54 pm
சென்னை: நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், தலைமை வழக்கறிஞரிடம் கருத்து கேட்டுள்ளது.
Samayam Tamil health dept asked suggestion from attorney general
நீட் தேர்வில் அடுத்து என்ன? மாறி மாறி விளக்கம் கேட்பதால் நீடிக்கும் குழப்பம்...!


நீட் தேர்வில் தமிழகத்திற்கு ஓராண்டிற்கு விலக்கு அளிக்கும் அவசரச் சட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

இதற்கிடையில் நீட் தேர்வு தேவை என்று வலியுறுத்தி சிபிஎஸ்இ மாணவர்கள் தரப்பில் வழக்கறிஞர் நளினி சிதம்பரம் உச்சநீதிமன்றம் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தலைமை வழக்கறிஞர் வேணுகோபாலிடம் மத்திய அரசு ஆலோசனை கேட்டது.

இதனைத் தொடர்ந்து தலைமை வழக்கறிஞரை நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அவருக்கு பதிலாக மத்திய அரசின் வழக்கறிஞர் துஷார் மேத்தா ஆஜராகி விளக்கமளித்தார்.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தலைமை வழக்கறிஞர் வேணுகோபாலிடம் கருத்து கேட்டுள்ளது.

நீட் தேர்வு எழுதியவர்களும், அதனை நீக்கக் கோரி வலியுறுத்துவோருக்கும் பாதிப்பு இல்லாமல் முடிவெடுக்க வேண்டும் என்று மத்திய அரசு செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Health Dept asked suggestion from attorney general.

அடுத்த செய்தி