ஆப்நகரம்

இப்படியொரு சிறப்பம்சமா? இதோ ”அம்மா பிளாட்டினம் பிளஸ்” சுகாதார காப்பீட்டு திட்டம் அறிமுகம்!

அம்மா பிளாட்டினம் பிளஸ் சுகாதார காப்பீட்டு திட்டத்தை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

Samayam Tamil 12 Jun 2019, 2:01 pm
தமிழக அரசின் சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பெயரில் “அம்மா ஒருங்கிணைந்த உடற்பரிசோதனை திட்டம்” செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் மூன்று விதமான உடற்பரிசோதனை அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
Samayam Tamil TN Govt


அவை ரூ.1000க்கு “அம்மா கோல்ட்”, ரூ.2000க்கு “அம்மா டைமண்ட்”, ரூ.3000க்கு “அம்மா பிளாட்டினம்” ஆகியவை ஆகும். இந்த திட்டத்தின் வெற்றிகரமான முதலாண்டு தினம், சென்னை ஓமந்தூரர் எஸ்டேட்டில் உள்ள அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் கொண்டாடப்பட்டது.

இதில் கலந்து கொண்ட தமிழக சுகாதார அமைச்சர் சி.விஜயபாஸ்கர், “அம்மா பிளாட்டினம் பிளஸ்” என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தினார். இதனை ரூ.4000 என்ற கட்டணத்தில் பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த “அம்மா பிளாட்டினம் பிளஸ் திட்டத்தின்” கீழ், கண் பார்வை சோதனை, குளுக்கோமா சோதனை, ரிஃப்ரக்டரி எர்ரர்ஸ் சோதனை, ரிட்டினல் சோதனை, கலர் விஷன் சோதனை, டிரட் மில் மற்றும் நுரையீரல் செயல்பாட்டு சோதனை ஆகியவை மேற்கொள்ளப்படும்.

முன்னதாக கடந்த ஆண்டு ஜூன் 8ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்ட “அம்மா பிளாட்டினம் திட்டத்தின்” கீழ், மொத்தம் 9,845 பேர் அரசின் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக ரூ.2.48 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி