இயற்கை அளித்த கொடையான தண்ணீர் தற்போது மிகப்பெரிய வர்த்தகமாக மாறிவிட்டது. வாட்டர் பாட்டில்கள், வாட்டர் கேன்கள் என வெவ்வேறு அளவுகளில் அடைக்கப்பட்டு விற்கப்படுகின்றன. தண்ணீர் அரசியல் என்பது சர்வதேச அளவில் மிகவும் முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. அடுத்த உலகப் போர் கூட தண்ணீருக்காக வரலாம் என வல்லுநர்கள் கூற கேட்டிருக்கிறோம். கேன் வாட்டர் விற்பனை
இந்நிலையில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வரும் தண்ணீர் தரமான முறையில் கிடைக்கிறதா? என்ற கேள்வி பலருக்கும் எழத் தான் செய்கிறது. இந்த விவகாரத்தை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தற்போது கையிலெடுத்துள்ளார். முன்னதாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சுகாதாரத்துறை அதிகாரிகள்
இதில் 45 சுகாதார மாவட்டங்களில் இருந்து அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் செந்தில் குமார், பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ளது.
பழங்களை பழுக்க வைத்தல்
இதனால் தண்ணீரின் தேவை பெரிதும் அதிகரிக்கும். கேன் வாட்டர் விற்பனை பரவலாக காணப்படும் சூழலில், அதற்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் கேன் வாட்டர் தரமான முறையில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். மேலும் பழங்கள் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படுகின்றன.
குளிர் பானங்கள் தயாரிப்பு
இதை உரிய முறையில் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வியாபாரிகளை தொடர்ந்து கண்காணித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். இதேபோல் குளிர் பானங்கள் பாதுகாப்பான முறையில் தயாரிக்கப்படுகிறதா? என்பதையும் ஆய்விற்கு உட்படுத்த வேண்டும். இதுதவிர தடை விதிக்கப்பட்ட பொருட்களின் விற்பனையை கண்காணித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தடை செய்யபட்ட பொருட்கள்
குட்கா, பான் மசாலா போன்ற பொருட்கள் தமிழகத்தின் பல்வேறு கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அண்டை மாநிலமான கர்நாடகாவில் இவற்றுக்கு தடை ஏதும் விதிக்கப்படவில்லை. எனவே அங்கிருந்து தமிழகத்திற்கு சட்ட விரோதமாக கொண்டு வரப்பட வாய்ப்புள்ளது.
திடீர் ரெய்டுகள்
ரயில்கள், காய்கறி லாரிகள் மூலமும் இங்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்துள்ளன. எனவே தீவிரமாக கண்காணித்து சம்பந்தப்பட்ட கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். திடீர் ரெய்டுகளை நடத்த வேண்டும். இதனை தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வரும் தண்ணீர் தரமான முறையில் கிடைக்கிறதா? என்ற கேள்வி பலருக்கும் எழத் தான் செய்கிறது. இந்த விவகாரத்தை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தற்போது கையிலெடுத்துள்ளார். முன்னதாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சுகாதாரத்துறை அதிகாரிகள்
இதில் 45 சுகாதார மாவட்டங்களில் இருந்து அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் செந்தில் குமார், பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ளது.
பழங்களை பழுக்க வைத்தல்
இதனால் தண்ணீரின் தேவை பெரிதும் அதிகரிக்கும். கேன் வாட்டர் விற்பனை பரவலாக காணப்படும் சூழலில், அதற்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் கேன் வாட்டர் தரமான முறையில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். மேலும் பழங்கள் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படுகின்றன.
குளிர் பானங்கள் தயாரிப்பு
இதை உரிய முறையில் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வியாபாரிகளை தொடர்ந்து கண்காணித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். இதேபோல் குளிர் பானங்கள் பாதுகாப்பான முறையில் தயாரிக்கப்படுகிறதா? என்பதையும் ஆய்விற்கு உட்படுத்த வேண்டும். இதுதவிர தடை விதிக்கப்பட்ட பொருட்களின் விற்பனையை கண்காணித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தடை செய்யபட்ட பொருட்கள்
குட்கா, பான் மசாலா போன்ற பொருட்கள் தமிழகத்தின் பல்வேறு கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அண்டை மாநிலமான கர்நாடகாவில் இவற்றுக்கு தடை ஏதும் விதிக்கப்படவில்லை. எனவே அங்கிருந்து தமிழகத்திற்கு சட்ட விரோதமாக கொண்டு வரப்பட வாய்ப்புள்ளது.
திடீர் ரெய்டுகள்
ரயில்கள், காய்கறி லாரிகள் மூலமும் இங்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்துள்ளன. எனவே தீவிரமாக கண்காணித்து சம்பந்தப்பட்ட கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். திடீர் ரெய்டுகளை நடத்த வேண்டும். இதனை தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.