ஆப்நகரம்

புயலால் பாதித்த மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கிய அமைச்சர் விஜயபாஸ்கர் குடும்பத்தினர்!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சுற்றுவட்டார கிராமங்களில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் குடும்பத்தினர், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினர்.

Samayam Tamil 26 Nov 2018, 9:34 am
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் குடும்பத்தினர், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினர்.
Samayam Tamil cats
புயலால் பாதித்த மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கிய அமைச்சர் விஜயபாஸ்கர் குடும்பத்தினர்!


கடந்த 16-ம் தேதி நாகை அருகே கரையை கடந்த கஜா புயல் டெல்டா மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆயிரகணக்கான மக்கள் வீடு, உடமைகளை இழந்து உணவு, குடிநீர், மின்சாரம் என எந்த அடிப்படை வசதியுமின்றி இருளில் தவித்து வருகின்றனர்.

இதற்கிடையே, மத்திய உள்துறை இணைச்செயலாளர் டேனியல் ரிச்சர்ட் தலைமையிலான குழு இன்று மூன்றாவது நாளாக புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். தன்னார்வலர்களும் தங்களால் இயன்ற உதவிகளை மக்களுக்கு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சுற்றுவட்டார கிராமங்களில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் குடும்பத்தினர், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினர்.

ரொட்டித் துண்டுகள், தீப்பெட்டி, மெழுகுவர்த்தி உள்ளிட்ட பொருட்களை விஜயபாஸ்கரின் மனைவி ரம்யாவும், அவரது குழந்தைகளும் வழங்கினர். இதேபோல் புயல் பாதித்த மற்ற பகுதிகளிலும் அவர்கள் நிவாரணப் பொருட்களை மக்களுக்கு வழங்கினர்.

அடுத்த செய்தி