ஆப்நகரம்

தமிழகத்தில் மேலும் 4 பேருக்கு ஒமைக்ரான் - சுகாதாரத் துறை செயலாளர் தகவல்!

தமிழகத்தில் 4 பேருக்கு ஒமைக்ரான் வைரஸுக்கான அறிகுறிகள் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது என சுகாதாரத் துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 16 Dec 2021, 10:53 pm
தமிழகத்தில் கூடுதலாக 4 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil Radhakrishnan


சென்னை கிங்ஸ் மருத்துவமனையில் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியபோது, “தமிழகத்தில் கூடுதலாக 4 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்புக்கு முந்தைய அறிகுறிகள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

நேற்று ஒமைக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்டவருடன் பயணித்த நபருடன் தொடர்பில் இருந்த 4 பேருக்கு S-ஜீன் (மரபணு) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர் சென்ற மார்க்கெட், திருமண நிகழ்வு, துக்க நிகழ்வு உள்ளிட்ட பகுதிகளில் 219 நபர்களுக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது.

சென்னை வந்தடைந்த ஒமிக்ரான்; தப்பிக்க அமைச்சர் சூப்பர் ஐடியா!
ஒரே இடத்தில் இருந்து 11 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. தற்போதைய சூழலில் கிங்ஸ் மருத்துவமனையில் ஒமைக்ரான் தொற்று பாதிக்கப்பட்டவர் உள்பட 13 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக 15 நாடுகளில் இருந்து வந்த 12,513 பேருக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி