ஆப்நகரம்

J. Radhakrishnan: சுகாதாரத்துறை செயலர் ஜெ.இராதாகிருஷ்ணன் குடும்பத்துக்கு கொரோனா... மருத்துவமனையில் அனுமதி

நான், என் மனைவி மற்றும் மகன் ஆகிய மூவரும் சோதனை செய்து கொண்டோம். அதில் என் மனைவிக்கும் மகனுக்கும் தொற்று உறுதியானது.

Samayam Tamil 21 Jul 2020, 12:03 am
தமிழக கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாகவும், சுகாதாரத்துறைச் செயலராகவும் பணியாற்றி வரும் இராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். இன் குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil radhakrishnan


சுகாதாரத்துறைச் செயலரின் மனைவியும் மகனும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று ட்விட்டரில் ஒருவர் பதிவிட்டதற்கு பதிலளிக்கும் விதமாக அவர் அளித்த பதிவில் தனது மாமனார் மற்றும் மாமியாரிடமிருந்து தொற்று ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இத் தொடர்பாக ட்விட்டரில் தெரிவித்த இராதாகிருஷ்ணன், “ஆம். எனது மாமனார் டாக்டர் நாகராஜன் மற்றும் அவரது மனைவிக்கு கடந்த வெள்ளிக்கிழமை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களுடன் நெருக்கமான இருந்ததால் நான், என் மனைவி மற்றும் மகன் ஆகிய மூவரும் சோதனை செய்து கொண்டோம். அதில் என் மனைவிக்கும் மகனுக்கும் தொற்று உறுதியானது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் அரசு கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்”


கொரோனா தொற்று ஆரம்பக்கட்டத்தில் இவர் இல்லை. கடந்த ஜூன் மாதம் தொடங்கியபிறகு கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரித்ததைத் தொடர்ந்து அப்போதைய சுகாதாரத்துறைச் செயலர் பீலா ராஜேஷ் மாற்றப்பட்டு இவர் மீண்டும் சுகாதாரத்துறைச் செயலராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி