ஆப்நகரம்

பாதி உடம்பு தண்ணீருக்குள் இருக்க பாடை சுமக்கும் ஊர்... ஆண்டுகளாகத் தொடரும் அவலம்...

ஏரியில் நீர் நீரம்பியுள்ளதால் மயானத்துக்குச் செல்லக்கூட கழுத்தளவு தண்ணீரில் மிதந்தபடி பிரேதத்தை தூக்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 4 Dec 2019, 4:14 pm
அரியலூர் மாவட்டத்தில் மயானத்துக்குச் செல்ல ஏரியின் வடிகால் பகுதியை கடந்து செல்ல வேண்டிய நிலையில், ஏரியில் நீர் நீரம்பியுள்ளதால் கழுத்தளவு தண்ணீரில் மிதந்தபடி பிரேதத்தை தூக்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil paadai lake


அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கழுவந்தோண்டி கிராமத்தில் உள்ளது நைனார் ஏரி. சுமார் 64 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி. இந்த ஊரில் இருக்கும் மயானக் கோட்டைக்கு செல்ல ஏரியின் கரையோரத்தில் தான் சாலை அமைந்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் மழை காலங்களில் இறப்பவர்களை மயானத்திற்கு கொண்டு செல்ல கழுத்தளவு தண்ணீரில் பாடைகளை சுமந்து செல்ல வேண்டியுள்ளது. இந்நிலையில், தற்போது கோசலம் என்ற மூதாட்டி உடல் நிலை சரியில்லாமல் நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு அமைச்சரை ஒப்புதல்!!

அவரை அடக்கம் செய்வதற்காக, மயான கோட்டைக்கு செல்லும் சாலையில் உள்ள நைனார் ஏரியின் நீர்வரத்தையும் பொருட்படுத்தாமல், கழுத்தளவு தண்ணீரில் சென்று அடக்கம் செய்ய வேண்டியுள்ளது. ஏரியின் வடிகால் அருகே மேற்கொள்ளும் இந்த பயணம் ஆபத்தான ஒன்றாக உள்ளது.

இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் இறந்தவர்களை கொண்டு செல்ல மிதந்து சென்று சிரமப்பட வேண்டியுள்ளது. இது ஒருமுறை இருமுறை அல்ல. இதுவரை பல முறை இதேபோன்ற அவலங்கள் நடந்துள்ளன.

அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை எச்சரிக்கை - எந்தெந்தப் பகுதிகளில் தெரியுமா?

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். அதிகாரிகள் வருவார்கள். பார்வையிடுவார்கள். சென்றுவிடுவார்கள் என்கின்றனர் பொதுமக்கள்.

ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில், வெள்ளம் வந்து ஏரியின் நிலை இப்படி ஆகும்போதெல்லாம், இதே நிலை நீடித்து வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் இதனைப் போர்க்கால அடிப்படையில், கரையை பலப்படுத்தி சாலை வசதி செய்து கொடுக்க வேண்டி அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரம்பலூரில் ரூ. 42,000 மதிப்பிலான வெங்காயம் திருட்டு!!

அடுத்த செய்தி