ஆப்நகரம்

ஆளுநர் விமானத்தில் கொண்டு செல்லப்பட்ட இதயம்..! சென்னையில் திக் திக்...

சேலத்திலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களுடன் மனித இதயம் மற்றும் நுரையீரல் சென்றது.

Samayam Tamil 10 Feb 2020, 5:48 pm
சேலத்தில் மூளைச்சாவடைந்த வாலிபரின் இதயம், நுரையீரல், சிறுநீரகம் தானமாக்கப்பட்ட நிலையில் மூன்று உறுப்புகளும் வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது.
Samayam Tamil ஆளுநர் விமானத்தில் கொண்டு செல்லப்பட்ட இதயம்


கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த சுரேந்திரன் (20) என்பவர் சேலத்தில் உள்ள கோழி பண்ணை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 8ம் தேதி பணி முடிந்து வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்த சுரேந்திரன் சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார்.

தலையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுரேந்திரன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மூளைச்சாவடைந்த நிலையில் அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க பெற்றோர் மற்றும் உறவினர்கள் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் சுரேந்திரனின் இதயம், நுரையீரல், இரண்டு சிறுநீரகங்கள் அறுவை சிகிச்சை மூலமாக சேலம் அரசு மருத்துவமனையில் எடுக்கப்பட்டு சென்னை, சேலம், கோவையில் உள்ள மூன்று வெவ்வேறு மருத்துவமனைகளில் கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

இதன் முதற்கட்டமாக இறந்தவரின் இதயம் சேலத்திலிருந்து சென்னை குளோபல் மருத்துவமனைக்கு விமானம் மூலமாக கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை சென்னையில் இருந்து சேலத்திற்கு தனியார் பள்ளி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விமானம் மூலம் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வந்தடைந்தார். பின்னர் நிகழ்ச்சி முடிந்து அவர் சென்னைக்கு திரும்பிய அதே விமானத்தில், சேலம் அரசு மருத்துவமனையில் இருந்து கொண்டுவரப்பட்ட இதயம் மற்றும் நுரையீரல் கொண்டு செல்லப்பட்டது.

corona: கொரோனா பற்றி பழந்தமிழ் குறிப்புகள்... பரவும் செய்திகள் உண்மையா?

அதேபோல சுரேந்திரனின் இரண்டு சிறுநீரகங்களில் ஒன்று கோவை மருத்துவமனைக்கும் மற்றொன்று சேலத்தில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டது. இதற்காக சேலம் மருத்துவமனையில் இருந்து விமான நிலையம் வரை போக்குவரத்து இடையூறு ஏற்பாடாதவாறு போலீசார் சாலையை துரிதப்படுத்தினர்.

மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்புகளை தானமாக கொடுக்க சம்மதித்த பெற்றோரையும், அதற்கு உறுதுணையாக இருந்த மருத்துவர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள், போக்குவரத்து போலீசார் என அனைவரையும் பாராட்டி வருகின்றனர்.

அடுத்த செய்தி